காதல்,
காமம், கன்றாவி, கற்பு, கர்மம் எல்லாமே கலவி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட
செயலேயன்றி காதலிக்கும் போது காமம் கூடாது, திருமணம் செய்த பிறகும்
காதலிக்கலாம் என்று கேனத்தனமான கொள்கை உடையவர்கள் இதைப் படிப்பதை
தவிர்த்து வேறு ஏதாவது உருப்படியான வேலை இருந்தால் பார்க்கலாம்...
தமிழ் சினிமாவின் சமகால இயக்குனர்களில் செல்வராகவன், பாலா, மிஷ்கின், அமீர், பிரபுசாலமன் போன்றவர்களை ஒரு வகையாகவும், வசந்தபாலன், பாலாஜிசக்திவேல், சுசீந்திரன், சசி போன்றவர்களை ஒரு வகையாகவும் பிரித்துக் கொள்ளலாம். முதல்வகை இயக்குனர்கள் எதற்காகவும் தங்கள் படைப்பில் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாத, தாங்கள் நினைப்பது மட்டும் தான் திரையில் வரவேண்டும் என்ற பிடிப்போடு இருப்பவர்கள். இரண்டாம் வகையில் இருப்பவர்கள் எப்படியாவது இந்த சமூகத்திற்கு மெசேஜ்(!) கொடுத்தாக வேண்டும், அதே சமயம் படமும் அனைத்து சென்டர்களிலும் ஹிட்டடிக்க வேண்டும் என்ற நோக்கில் படமெடுப்பவர்கள்.
சங்கர், ஹரி, தரணி, etc. என்றொரு பெரிய லிஸ்ட் இயக்குனர்கள் லாஜிக்கையெல்லாம் தூக்கி குப்பையில் கடாசிவிட்டு "ஹிட்" ஒன்றே குறி என, வெறியுடன் ஒரே பார்முலாவை வைத்து அரைத்த மாவை அரைத்து காலந் தள்ளிக் கொண்டிருக்கின்றன. பாலாஜி தரனீதரன் (ந.கொ.ப.கா), தியாகராஜன் குமாரராஜா (ஆரண்ய காண்டம்), கமலக்கண்ணன் (மதுபானக் கடை), பா.ரஞ்சித் (அட்டகத்தி) என ஒரு பட்டாளம் திடீரென உள்ளே புகுந்து ஆனந்த அதிர்ச்சியையும் அவ்வப்போது வழங்குவதுண்டு.
தமிழ் சினிமாவின் சமகால இயக்குனர்களில் செல்வராகவன், பாலா, மிஷ்கின், அமீர், பிரபுசாலமன் போன்றவர்களை ஒரு வகையாகவும், வசந்தபாலன், பாலாஜிசக்திவேல், சுசீந்திரன், சசி போன்றவர்களை ஒரு வகையாகவும் பிரித்துக் கொள்ளலாம். முதல்வகை இயக்குனர்கள் எதற்காகவும் தங்கள் படைப்பில் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாத, தாங்கள் நினைப்பது மட்டும் தான் திரையில் வரவேண்டும் என்ற பிடிப்போடு இருப்பவர்கள். இரண்டாம் வகையில் இருப்பவர்கள் எப்படியாவது இந்த சமூகத்திற்கு மெசேஜ்(!) கொடுத்தாக வேண்டும், அதே சமயம் படமும் அனைத்து சென்டர்களிலும் ஹிட்டடிக்க வேண்டும் என்ற நோக்கில் படமெடுப்பவர்கள்.
சங்கர், ஹரி, தரணி, etc. என்றொரு பெரிய லிஸ்ட் இயக்குனர்கள் லாஜிக்கையெல்லாம் தூக்கி குப்பையில் கடாசிவிட்டு "ஹிட்" ஒன்றே குறி என, வெறியுடன் ஒரே பார்முலாவை வைத்து அரைத்த மாவை அரைத்து காலந் தள்ளிக் கொண்டிருக்கின்றன. பாலாஜி தரனீதரன் (ந.கொ.ப.கா), தியாகராஜன் குமாரராஜா (ஆரண்ய காண்டம்), கமலக்கண்ணன் (மதுபானக் கடை), பா.ரஞ்சித் (அட்டகத்தி) என ஒரு பட்டாளம் திடீரென உள்ளே புகுந்து ஆனந்த அதிர்ச்சியையும் அவ்வப்போது வழங்குவதுண்டு.
விடலைப்
பருவ காதலை
பாரதிராஜாவின் அலைகள்
ஓய்வதில்லையைத் தொடர்ந்து பல இயக்குனர்கள் நோண்டி நுங்கு எடுத்து இன்னும்
சப்பி போட்ட மாங்கொட்டையில் சதையைத் தேடிக் கொண்டிருக்கின்றனர்.
பூணூல்-சிலுவையைக் கழட்டி வீசிய க்ளைமேக்ஸைத் தொடர்ந்து "ஆற்றைக் கடந்து
ஓடிப் போய் காதலில் வெற்றியடைவது", "ஸ்லோ மோஷனில் ஓடி ரயிலைப்
பிடித்தவுடன் பச்சைக் கொடியைக் காட்டி சுபம் போடுவது", "ரெண்டுபேரும்
செத்துப் போவது",
"ஒருத்தர் செத்து ஒருத்தர் லூசாவது (இதில் லூசாவது பெரும்பாலும் ஆண்களே)",
"பொது எதிரியைக் கொலை செய்து ஜெயிலுக்குப் போவது" என பல வரலாற்று
முடிவுகள் கொண்ட பாதையை தமிழ் சினிமா கடந்து வந்திருக்கிறது. ஆனால்
நிஜத்தில் நடக்கும் சில நிகழ்வுகளோ, "பெண் முகத்தில் ஆசிட் அடிப்பது",
"பெற்றோர் தூக்கு மாட்டிக் கொள்வது", காலனியைக் கொளுத்துவது", "போலிஸ்
ஸ்டேஷனில் கட்டப்
பஞ்சாயத்து செய்து கொள்வது", "தற்கொலை அல்லது கொலை செய்யப் பட்டவர்களுக்கு
வீரவணக்கம் செலுத்துவது" போன்றவை.
சென்னை நகரத்தில் தங்களைத் தானே
மாடர்ன்கள் என நினைத்துக் கொண்டு பல அரை வேக்காடுகள் செய்யும் இன்ஸ்டன்ட்
காமத்தையும், ரூம் போட்டு மேட்டர் செய்வதில் இருக்கும் ஆர்வத்தில்
பாதுகாப்பை மறந்ததையும், அதனால் ஏற்படும் பக்க விளைவுகளையும் ஒரு
படைப்பாக்கி
மிடில் கிளாஸ் ஆடியன்ஸை நோக்கி குறி வைத்து எறிந்து அதில் வெற்றியும்
பெற்று விட்டார் "ஆதலால் காதல் செய்வீர்" சுசீந்திரன். 1989-ல்
புதியபாதையில் "நிரோத் உபயோகம்" பற்றி அனைவருக்கும் மண்டையில் உறைக்கும்
வகையில் படு லோக்கலாக பார்த்திபன் சொன்னதை ஒரு ஓரத்தில் ஜாம் தடவி சுசீந்திரன் சொல்லாமல்
சொல்லியிருக்கிறார்.
படத்தின் முற்பாதியில் வரும் கல்லூரிக் காதல், பெண்-பெற்றோர் உறவு, பையன்-பெற்றோர் உறவு, நட்பு என்று எதிலும் எந்தப் புதுமையும் இல்லை. பிற்பாதியில் கல்லூரிக்குச் செல்லும் பெண் கர்ப்பமானதைத் தொடர்ந்து இரு குடும்பங்களிலும் ஏற்படும் குழப்பங்களை பார்வையாளர்களுக்குத் தெளிவாக காட்டி பரபரப்பை ஏற்படுத்திய விதம் ஓகே. பெண்ணின் பெற்றோர்களாக துளசியும் ஜெயப்பிரகாஷும் வாழ்ந்து காட்டியுள்ளனர்.
படம் முடிவதற்கு ஐந்து நிமிடங்கள் முன்பு ஹீரோ/ஹீரோயின் என்ட்ரி... பஞ்ச் டயலாகாக ஒரு அலறல்... "அட" போட வைத்தது.
காதல்-காமம் ரெண்டுமே "மேட்டரு"க்கான மீட்டர் தான் என்பதை குழப்பமில்லாமல் சொல்லி; கல்லூரி மாணவர்கள், குறிப்பாக பெண்கள்- உடலுறவு, பாதுகாப்பு, கர்ப்பம், கருத்தடை, பாலியல் நோய்கள், கருக்கலைப்பு, ஆணுறை, லூப், Morning-After Pill போன்ற விபரங்களை தெளிவாக அறிந்திருக்க வேண்டும் என்பதை முன் வைத்து இப்படம் வந்திருந்தால் பாராட்டியிருக்கலாம். அதை விடுத்து கர்ப்பமான பெண்ணின் பெற்றோர் அழுது புலம்புவதும், பஞ்சாயத்து பேசுபவர்கள் பெண்ணைப் பற்றி மட்டும் கேவலமாகப் பேசுவதும் (பெண்ணின் அம்மா கூட பையனின் அக்காவை கேவலமாகப் பேசுகிறார்), திருமணம் ஆகாத ஒரு பெண்ணின் கருக்கலைப்பு என்பதை போதைப் பொருள் கடத்தல் ரேஞ்சை விட ஓவராகக் காட்டியதும், எப்படியாவது அந்தப் பெண் தன் கருவை கலைத்து விட மாட்டாளா.. என்ற எண்ணத்தை பார்ப்பவர்களுக்கு ஏற்படுத்த மேற்கொண்ட பிரயத்தனங்களும் சலிப்படைய வைக்கின்றன.
பலரும் இப்படத்தை பெற்றோர் தமது பதின்வயது குழந்தைகளுடன் சென்று கட்டாயம் பார்க்க வேண்டும் என பரிந்துரை செய்கின்றனர். தாரளமாக சென்று பார்க்கலாம். பாலியல் குறித்த நல்ல புரிதல் உள்ள இளைஞர்க்கு இப் படம் பெரும் மொக்கையாகவே தோன்றும். இறுதிக் காட்சியில் பெண்ணுக்கு வேறொரு பையனுடன் நிச்சயதார்த்தம் நடப்பது போல காட்டி கற்பை(!) விட கர்ப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவிற்காவது தமிழ் சினிமா வளர்ந்துள்ளதே என்பது ஆறுதல்..!!
7G-ரெயின்போ காலனியில் அனிதா கதிரிடம் ஹோட்டல் ரூமில், "i feel like doing it" என்று சொல்வாளே, அதுதாண்டா காதல்..!!
படத்தின் முற்பாதியில் வரும் கல்லூரிக் காதல், பெண்-பெற்றோர் உறவு, பையன்-பெற்றோர் உறவு, நட்பு என்று எதிலும் எந்தப் புதுமையும் இல்லை. பிற்பாதியில் கல்லூரிக்குச் செல்லும் பெண் கர்ப்பமானதைத் தொடர்ந்து இரு குடும்பங்களிலும் ஏற்படும் குழப்பங்களை பார்வையாளர்களுக்குத் தெளிவாக காட்டி பரபரப்பை ஏற்படுத்திய விதம் ஓகே. பெண்ணின் பெற்றோர்களாக துளசியும் ஜெயப்பிரகாஷும் வாழ்ந்து காட்டியுள்ளனர்.
படம் முடிவதற்கு ஐந்து நிமிடங்கள் முன்பு ஹீரோ/ஹீரோயின் என்ட்ரி... பஞ்ச் டயலாகாக ஒரு அலறல்... "அட" போட வைத்தது.
காதல்-காமம் ரெண்டுமே "மேட்டரு"க்கான மீட்டர் தான் என்பதை குழப்பமில்லாமல் சொல்லி; கல்லூரி மாணவர்கள், குறிப்பாக பெண்கள்- உடலுறவு, பாதுகாப்பு, கர்ப்பம், கருத்தடை, பாலியல் நோய்கள், கருக்கலைப்பு, ஆணுறை, லூப், Morning-After Pill போன்ற விபரங்களை தெளிவாக அறிந்திருக்க வேண்டும் என்பதை முன் வைத்து இப்படம் வந்திருந்தால் பாராட்டியிருக்கலாம். அதை விடுத்து கர்ப்பமான பெண்ணின் பெற்றோர் அழுது புலம்புவதும், பஞ்சாயத்து பேசுபவர்கள் பெண்ணைப் பற்றி மட்டும் கேவலமாகப் பேசுவதும் (பெண்ணின் அம்மா கூட பையனின் அக்காவை கேவலமாகப் பேசுகிறார்), திருமணம் ஆகாத ஒரு பெண்ணின் கருக்கலைப்பு என்பதை போதைப் பொருள் கடத்தல் ரேஞ்சை விட ஓவராகக் காட்டியதும், எப்படியாவது அந்தப் பெண் தன் கருவை கலைத்து விட மாட்டாளா.. என்ற எண்ணத்தை பார்ப்பவர்களுக்கு ஏற்படுத்த மேற்கொண்ட பிரயத்தனங்களும் சலிப்படைய வைக்கின்றன.
பலரும் இப்படத்தை பெற்றோர் தமது பதின்வயது குழந்தைகளுடன் சென்று கட்டாயம் பார்க்க வேண்டும் என பரிந்துரை செய்கின்றனர். தாரளமாக சென்று பார்க்கலாம். பாலியல் குறித்த நல்ல புரிதல் உள்ள இளைஞர்க்கு இப் படம் பெரும் மொக்கையாகவே தோன்றும். இறுதிக் காட்சியில் பெண்ணுக்கு வேறொரு பையனுடன் நிச்சயதார்த்தம் நடப்பது போல காட்டி கற்பை(!) விட கர்ப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவிற்காவது தமிழ் சினிமா வளர்ந்துள்ளதே என்பது ஆறுதல்..!!
7G-ரெயின்போ காலனியில் அனிதா கதிரிடம் ஹோட்டல் ரூமில், "i feel like doing it" என்று சொல்வாளே, அதுதாண்டா காதல்..!!
- அன்புடன்
- மலர்வண்ணன்