Wednesday 23 December 2015

2015 - டாப் 15 சொலவடைகள்

ஆளாளுக்கு அவார்டு குடுக்குறாங்க..., நாமும் எதையாவது போடுவோம்...
2015 - டாப் 15 சொலவடைகள்:



 
15. "இரண்டு முறை யேசுவிடம் பேசியுள்ளேன்..."
- உமாசங்கர் ஐஏசு




 
14. "சென்னை சூப்பர் கிங்ஸ் தடை செய்யப்பட்டதில் தாவூதின் பங்கு உள்ளது என்பதற்கான ஈமெயில் ஆதாரம் என்னிடம் உள்ளது...” - சுbeepசாமி



 
13. "விவசாயிகள் தற்கொலைக்கு காரணம் காதல் விவகாரம், தற்கொலை செய்து கொள்ளாமல் இருக்க ராஜயோகம் பழகி விதைகளின் சக்தியைக் கூட்டலாம்..."
- வேளாண்(!) அமைச்சர் ராதாமோகன் சிங்




 
12. "நான் நாத்திகன் அல்ல, பகுத்தறிவாளன்..."
- ஒலக நாயகன்




 
 11. "நேதாஜி உயிருடன் உள்ளார் என்பதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.."
- வைகோ




 
 10. "இது அவரோட சொந்த கருத்து, அதுக்கும் BJP-க்கும் எந்த சம்பந்தமும் கிடையாது..."
- டமில் மீசிக் சவுன்டி




 
9. "திமுக ஆட்சிக்கு வந்தால் கமிஷன், கலெக்ஷன், கரெப்ஷன் இருக்காது.., விடியட்டும், முடியட்டும்..."
- நிரந்தர இளைஞரணி தளபதி




 
8. "குஷ்புவின் உருவில் அன்னை இந்திராவைப் பார்க்கிறேன்..."
- இ.வி.கே.எஸ்.இழ்ழங்கோவன




 
7. "மாற்றம்-முன்னேற்றம், முதல் நாள்(!) முதல் கையெழுத்து.."
- லவ் பெல்




 
6. "மா.மி.பு.த.இ.தெ.டா.அ. ஆணைக்கிணங்க தமிழகத்தில் அதிகளவு மழை பொழிந்துள்ளது..."
- சேலம் கலெக்டர் சம்பத் IAS 




 
5. "ராணுவத் தளபதி போல் செயல்பட்டார் முதல்வர்..."
- டினமழர்




 
4. "ஒன்னு குடுக்கட்டுமா..?!"
- ஏ.சி.பி. சார்




 
3. "இதுவே எனது கடைசி தேர்தலாக இருக்கலாம்.."
- டலீவர்




 
2. "கம்ம்ன்னு இருக்க மாட்டியா, தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்க..."
- கேப்டன்




 
 1. "எனக்கென்று யாரும் கிடயாது, உங்கள் துன்பங்களை எல்லாம் நானே சுமக்கிறேன்.."
- ஆத்தா


Wednesday 16 December 2015

எனது அரசு உங்கள் அரசாக மாறிய அற்புதம்: நன்றி யேசப்பா

"வணக்கம், உங்கள் அன்பு சகோதரி பேசுகிறேன்"
- என்னது!! அன்புச் சகோதரின்ற அடைமொழிக்கு ராமதாஸ் காப்பி ரைட்ஸ் குடுத்துட்டாரா?!

"கடந்த நூறு ஆண்டுகள் கண்டிராத மிகப் பெரும் தொடர் மழை ஏற்படுத்திய வெள்ளச் சேதங்களால் நீங்கள் அடைந்துள்ள துயரங்களை நினைத்து நினைத்து நான் வருந்துகிறேன்."
- பச்ச போர்டு வெச்ச கடையெல்லாம் தொறந்து தானே இருந்துச்சி..!!

"கவலை வேண்டாம். இது உங்கள் அரசு. எதையும் எதிர் கொண்டு வெல்லும் சக்தியை எனக்கு நீங்கள் அளித்திருக்கிறீர்கள்."
- குமாரசாமிகள் ஓய்வதில்லை..!!

"உங்களுக்காக நான், உங்களோடு எப்போதும் நான் இருக்கிறேன். விரைவில் இப்பெரும் துன்பத்திலிருந்து உங்களை மீட்டு புது மலர்ச்சியும் எழுச்சியும் அடையச் செய்வேன். இது உறுதி."
- to சீமான் & வைகோ, வேற வசனம் ரெடி பண்ணவும்..!!

"போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளையும் நிவாரணப் பணிகளையும் புணரமைப்புப் பணிகளையும் முழு வீச்சில் முடுக்கி விட்டிருக்கிறேன்.."
- கணக்கு வழக்கு எல்லாம் நம்ம கடலூர் கலெக்டர் தானே பாக்குறாரு..!?

"அமைச்சர்களும், அரசு அலுவலர்களும், காவல் துறையினரும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினரும், முப்படையினரும், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினரும் மற்றும் தன்னார்வத் தொண்டர்களும் அயராது தோளோடு தோள் சேர்ந்து உங்களுடன் அயராது உழைத்தார்கள்."
- வளர்மதியக்கா சாம்பிள் ஒன்னு போதுமே...!!

"உங்களுக்கு வரும் துன்பங்களையெல்லாம் நானே சுமக்கிறேன்..."
- ஸ்தோத்ரம் ஆண்டவரே... அல்லேலூயா....!!

"எனக்கென்று தனி வாழ்க்கை கிடையாது. எனக்கென்று உறவினர் கிடையாது. எனக்குச் சுயநலம் அறவே கிடையாது. எனக்கு எல்லாமும் நீங்கள்தான். என் இல்லமும் உள்ளமும் தமிழகம்தான்."
- சசிகலான்னா, மாருகோ மாருகோ பாட்டுக்கு வருமே அந்த புள்ள தானே..!! கமலை விட நல்லா ஆடுச்சுப்பா..!!

"என் பெயரை மறந்து போகும் அளவுக்கு, நீங்கள் அழைக்கின்ற அம்மா என்கின்ற ஒரு சொல்லுக்காகவே என் வாழ்நாட்களை உங்களுக்காக அர்பணித்து உழைத்துக் கொண்டிருக்கிறேன்.."
- சூப்பர் ஸ்டார் யோசிச்சு வெச்சிருந்த வசனம், பாத்ரூம்ல சொல்லிப் பாத்துட்டு இருக்கும் போது எப்படியோ லீக் ஆகிடுச்சி..., அந்த beepப் பயல வீட்டுப் பக்கம் சேக்காத தல..

"இந்த அரசு இயற்கைப் பேரிடர்களை வெற்றி கொள்வதில் எப்போதும் பெயர் பெற்ற அரசு என்பதை மீண்டும் ஒரு முறை நிலை நாட்டுவேன். எத்துயர் வரினும் அதையும் இத்தாயின் கரங்கள் துடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருங்கள். நன்றி!"
- சோலி முடிஞ்ச்சி.., ஏம்பா கொடநாடுக்கு கொசுமருந்து அடிச்சாச்சா..!?