Friday 22 July 2016

காளி, வித்யாசாகர், சூர்யா-வைத் தொடர்ந்து கபாலி

தனியா சினிமாக்கு போக ஆரம்பிச்சு முதன்முதலா முதல்நாள் முதல்காட்சிக்கு (இப்போ சுருக்கமா FDFS ன்னு சொல்றாங்கோ) போன படம் கவிதாலயாவின் அமீர்ஜான் இயக்கத்தில் ரஜினி நடித்த "சிவா".  காலைக்காட்சிக்கு சென்று வரிசையில் நின்று டிக்கெட் தீர்ந்து விட,  கவுன்ட்டரை (அந்தக் கவுண்டர் இல்லீங்கோவ்...) விட்டு வெளியே வர இயலாமல்  அடுத்த காட்சிக்கு நின்று டிக்கெட் வாங்கி சட்டையைப் புழிஞ்சு தோள்ல போட்டுட்டு போய் உக்காந்தா, அய்யய்யோ அதுவொரு துன்பியல் சம்பவம்.  இளையராஜாதான்  காப்பாற்றினார்.  அதன்பின்னர் குசேலன், லிங்கா நீங்கலாக அனைத்து ரஜினி படங்களும் FDFS தான்...
Over to Kabali...

பூசணிக்காயை தலையில உடைக்கிறது, சண்டைல பலபேரை ஒட்டுக்கா பறக்க விடறது, ஒரே பாட்டுல குபேரனாவது போன்ற கார்ட்டூனிஸ தனங்களை விடுத்து, தளபதிக்கு பிறகு, அதாவது 25 வருசத்துக்கு அப்புறமா அப்டியே திரும்பி வந்திருக்காரு ரஜினி.

Mass Opening , எதிரிகளின் தேடல், Gang War எனச் செல்லும் காட்சிகளுனூடே இழந்த மனைவியின் ஞாபகங்களை பரிதவிப்புடன் பார்வையால் ஏக்கத்துடன் கடந்து செல்வது செம ரஜினி.

தன் மகளைத் தேடிக் கொண்டிருக்கையில் துப்பாக்கி முனையில் கூலிப் படையினரால் மடக்கப்பட்டு, அடுத்து என்ன நடக்கும் என்ற நிலையில் அதன் தலைவி "அப்பா..." என உரக்க அழைத்து ரஜினியை நோக்கி ஒரு துப்பாக்கியை வீச, தன் மகளைக் கண்டு கொண்ட அதிர்ச்சியில் இருந்து மீள முடியாத நொடிக்குள் இரு கண்களால் மகளை பார்த்துக் கொண்டே ஒரு கையால் தன்னை நோக்கி வரும் துப்பாக்கியைப் பிடிக்கும் காட்சி..., வாவ்... காலையில 03:30க்கு அலாரம் வெச்சு எழுந்தது worth தான்..

ஒவ்வொரு முறை "மகிழ்ச்சி" சொல்லும் போதும் அந்தந்த சிச்சுவேஷனுக்கு ஏற்றார்போல் வசன உச்சரிப்பும், உடல் மொழியும் அற்புதம். 

"வீரத் துறந்திரன்.." பாட்டில் ரஜினி மயிரைக் கோதி நடப்பது முதல் தலைவனாக உருவெடுப்பது வரை உள்ள காட்சிகள் ரணகளம்...

பிரிந்த அப்பா-மகள் சேர்ந்ததை பக்கம் பக்கமான வசனங்கள் இல்லாமல் கைகளைப் பற்றிக் கொள்வதில் உணர்த்தியது அடுத்த கட்டம்..

வழக்கமான அரைலூசு நாயகிகள் போலல்லாமல் ராதிகா ஆப்தே, ரித்விகா, தன்ஷிகா-ன்னு மூவருமே அமர்க்களப் படுத்தியுள்ளனர்...

வசனங்களின்றி "அட்டகத்தி"தினேஷ், ரோபோவைப் போன்ற கேரக்டர், கண்ணாடி பாட்டில்களால் தாக்கப்படும் வரை...

பில்லா படத்துல அஜித்த கோட்டு-கூலர்ஸோட சுத்தவிட்டா மாதிரி இதுல ரஜினியை சுத்த விட்டிருந்தாலும் அதற்குண்டான காரணத்தை ரஜினி விளக்குவது பக்கா.

என்னதான் ரஜினி, ரஜினின்னு சொன்னாலும் இது ரஞ்சித் படம்.  காம்ப்ரமைஸ் செய்யாமல் எடுத்திருப்பார் போல் தான் தோன்றுகிறது.  படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இருந்தாலும் அவர்களுக்குண்டான முக்கியத்துவத்துடன் கட்டமைத்து அளித்தது சிறப்பு.  வசனங்களில் "ரஞ்சித் வாடை"யை கொஞ்சம் அதிகமாகவே தூவியிருக்கிறார்.

"காந்தி சட்டையை கழட்டியத்துக்கும், அம்பேத்கர் கோட்டு போட்டதுக்கும் நெறய வித்தியாசம் இருக்கு.."

"நாங்கெல்லாம் மெட்றாஸ்காரங்க..., நம்புங்க..."


"சோற்றுக்கே வழி இல்லாமல் தாண்டா இருந்தோம், ஆனால் இப்ப நாங்க முன்னேறி வருவது, நல்லா படிக்கிறது, உடுத்துறது உங்க கண்ணை உறுத்துதுன்னா , ஆமாண்டா அப்படித்தான் போடுவோம்.."


"நான் மேல வருவேண்டா, முன்னேறுவேண்டா, கோட்டும் சூட்டும் போட்டுக்கிட்டு உங்க முன்னாடி கால்மேல கால் போட்டு உட்காருவேண்டா... பிடிக்கலேன்னா சாவுங்கடா..."


"நீ ஆண்ட பரம்பரைன்ன.., நான் ஆளப் பொறந்த பரம்பரைடா...."


"நாம எப்படி ட்ரெஸ் பண்ணனும்னு முடிவு பண்றதுக்கு அவங்க யாரு..."


"உன் கருப்பு கலரை அப்டியே எடுத்து என் உடம்பு முழுதும் பூசிக்கணும்..."


குமுதவல்லிக்கான தேடலில் ஒரு theme-ம் எதிரிகளுக்கான வேட்டையில் ஒரு theme-ம் வைத்து கலக்கியிருக்கிறார் சந்தோஷ் நாராயண்.  க்ளைமாக்ஸ் சண்டைக்கு காட்சிக்கு "நெருப்புடா" பாடல் தெறிக்க விடுகிறது.

Gang War படமென்றாலே ச்சும்மா அனல் பறந்திருக்க வேண்டாமா?!

தேடல்கள், துரத்தல்கள், தப்பித்தல்கள், பழிவாங்குதல், சஸ்பென்ஸ் என பார்வையாளனை ஒரு நொடி கூட சீட்டில் சாயவிடாமல் செய்திருக்க வேண்டிய கான்செப்ட்.

திரைக்கதையில் மட்டும் இன்னும் கொஞ்சம் மெனக்கிட்டிருந்தால் மரண மாஸாக வந்திருக்க வேண்டிய படம் கபாலி.

வெற்றிமாறன் அளவிற்கு நடிகர் கிஷோரை ரஞ்சித் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது தனிப்பட்ட வருத்தம்.

டைகரிடம் (மெட்ராஸ் பட ஜானி) போலீஸ் துப்பாக்கி குடுத்து அனுப்புவது கபாலியின் பாதுகாப்புக்கா, போட்டுத்தள்ளவா?!

கபாலி - ஒரு தெளிந்த நீரோடையைப் போன்ற அளவான வேகத்தில் செல்லும் ரஞ்சித் படம்.  ரஜினிக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.

பரட்டை, காளி, வித்யாசாகர், சக்ரவர்த்தி, டேவிட் பில்லா, காளையன், அலெக்ஸ் பாண்டியன், சூர்யா, ரோபோ சிட்டி வரிசையில் கபாலி..!!

பி.கு.
  • மலேசிய தமிழர்களின் வரலாறு சரியாகத் தெரியாமல் ரஞ்சித்தும் ரஜினியும் மாபெரும் வரலாற்றுப் பிழையை செய்துவிட்டனர் என இன்றிலிருந்து திடீர் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கிளம்பி வரலாம்.
  •  
  •  "படத்தில் சில குறிப்பிட்ட வசனங்களை நீக்க வேண்டும்" என சிலபல லெட்டர் pad கட்சிகள் போராட்டம் நடத்தி இலவச விளம்பரம் பெற்றுக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.

10 comments :

  1. உங்களுக்கு என்ன ஆச்சு? :)

    இதைவிட பாசிடிவா இந்தப்படத்துக்கு யாரும் விமர்சனம் எழுத முடியாதுனு நினைக்கிறேன்:) நான் இன்னும் படம் பார்க்கலை. :)

    ReplyDelete
    Replies
    1. முதல்நாள் காலையில நாலரை மணி ஷோ-க்கு போறேன்னா எந்த எதிர்பார்ப்புல போயிருப்பேன்னு சொல்லத் தேவையில்லை. ஆனா படம் ஆரம்பிச்சு அரை மணி நேரத்துல "இது வேற லெவல்"ன்னு புரிஞ்சு போச்சு. அதுமட்டுமில்ல, தியேட்டர்ல இருந்த ஒட்டுமொத்த ரஜினி ரசிகர்களையும் கட்டிப் போட்டு உட்கார வெச்சு "இது நீங்க எதிர்பார்த்து வந்த ஹீரோயிசத்துக்கான படமல்ல. ஹீரோவை மையமாய் வைத்து சொல்லும் கருத்தை ஹீரோயிசமாய் கொண்ட கதை"ன்னு தெளிய வெச்சு அனுப்பிட்டாங்க...

      Delete
  2. unga vimarsanam arumai.
    varun sir sonnathuthan naanum.

    naalai nan paarkka poren.



    ReplyDelete
    Replies
    1. நன்றி மஹேஷ்...
      வருணுக்கு சொன்னதே தான் உங்களுக்கும்...
      ஒரு சின்ன டிப், "இது ஒரு ரஞ்சித் படம்"ன்னு mind set பண்ணிட்டு உட்கார்ந்து பாருங்க...

      Delete
  3. மலர்வண்ணன் உங்க விமர்சனம் மிக நன்றாக இருக்கிறது. எனக்கு ரஜனி பிடிக்கும் ஆயின் எனக்கு ரஜனியின் பழைய படங்களே மனதில் பதிந்து இருப்பதால் அந்த ரஜனியைப் பார்க்க முடியவில்லை என்பதால் கொஞ்சம் ஏமாற்றம். அவர் பறந்து அடிப்பதற்காக இல்லை ..பல பழைய படங்களில் அவர் நடிப்பு ...இதிலும் அவர் நன்றாகச் செய்திருந்தாலும் ஏதோ மிஸ்ஸிங்க் போல..ஒரு வேளை ரஜனியை நினைத்துப் போனதாலும் இருக்கலாம்...இது ரஞ்சித்தின் படம்தான்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி...
      பாஷா, படையப்பா புடிச்சவங்களுக்கு கபாலி பிடிக்காமல் போகலாம்...
      முள்ளும் மலரும், ஜானி புடிச்சவங்களுக்கு கபாலி கண்டிப்பா பிடிக்கும்.

      Delete
  4. This is a classic cult movie in the calibre of God Father genre. Rajini's nakkal, nayyandi along with his body language is ultimate. This may not be his best but still enjoyable experince.

    ReplyDelete

  5. Kabali is a fantastic movie for Rajini acting and Ranjit concept. It's not Dalit movie. It's a movie for all oppressed and suppressed. Be a honest to say any about this movie. ***Watch more***

    Makizhchi!!! We should always support good thing. We can just forget the bad thing. But good thing should be supported when some one intentionally try to damage it.

    After 10-20 years, people will realize the impact of Kabali movie. Because at that time also, common people will be oppressed and suppressed by some one.

    Kabali says to fight for ur right; Go and fight yourself; don't expect others will fight for you (that's what the last scene says that when Rajini tells students "why you complain to me"). It means all should involve fighting for equal rights while taking care of family and business and personal life. It's a great concept!

    Watch more Kabali!

    By the way, I am not related to any way with Kabali movie or any one involved with that movie. But I was little frustrated to see the reviews when people write bad review with prejudice mind. Pa. Ranjit has clearly spoken about his vision yesterday. We need to bring the social change through mainstream cinema. It's one of the forethought of The Great CN Annnadurai. That's why he encouraged Kalaignar Karunanithi and MGR in politics. Cinema is an entertainment, but it is also a medium of change. It should not be just only for seeing girls interior skin or something else. So we should support the directors like Pa. Ranjit.

    ReplyDelete