Sunday 4 September 2016

பெண்குட்டிகள், ப்ரேமம் மற்றும் dr.ராமதாஸ்

பாமக தலைமையில் சமீபத்தில் தலித்துகள் அல்லோதார் கூட்டத்தின் கருத்தரங்கின்(!) முடிவில் எடுக்கப்பட்ட அவங்களே சொல்லிக்கிற தீர்மானங்கள், தஞ்சாவூர் மட்டுமன்றி அஜந்தா, எல்லோரா, சித்தன்னவாசல், மொஹஞ்சதாரோ, ஹரப்பா, பிரமிட், சீனப் பெருஞ்சுவர், கொலோசியம், ஈபில் டவர்  உள்ளிட்ட அனைத்து கல்வெட்டுகளிலும் பொறிக்கப்பட வேண்டியவை...

1.கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து முடித்த பின்னர் தான் காதலிக்க அனுமதி கொடுக்க வேண்டும்.
 - சூப்பரப்பு... அப்புறமா இவுங்களே கட்சி செலவுல லவ் பண்றதுக்குண்டான எல்லா வசதியும் பண்ணி குடுத்து, சீர் செனத்தி எல்லாம் செஞ்சு கல்யாணம் பண்ணி வெப்பாங்க..!!

2.தமிழக அரசு இரு பாலர் கல்வி முறையை ஒழித்து விட்டு பெண் பாலினத்திற்கு தனி கல்வி நிலையங்களும், ஆண் பாலினத்திற்கு தனி கல்வி நிறுவனங்களையும் அமைக்க வேண்டும்.
 - இதுக்கு பதிலா சாதி வாரியான பள்ளிக்கூடங்களை தொறந்து வெச்சுட்டா எந்தப் பிரச்னையும் இருக்காதே!! இஸ்கூலுக்கு அனுப்பினா மாதிரியும் ஆச்சு, வரன் பாத்தா மாதிரியும் ஆச்சு..

3.ஒரு குறிப்பிட்ட சாதிக்கு மட்டும் பி.சி.ஆர்., சட்டம் என்று இருக்கிறதாம்.  நாம் அனைவரும் சேர்ந்து பி.சி.ஆர். சட்டத்தை விட பெரிய சட்டத்தை கொண்டு வர வேண்டும்.
 - ஆமாமா... நல்லா பெருசா 300-க்கு 300 அடியில பெரிய சட்டமா செஞ்சு வைங்க... பாக்குறவன் ச்சும்மா மிரளணும்..!!

4.காதலால் பாதிக்கப்படும் பெண்களுக்கு 1 கோடி வழங்கவேண்டும்.
 - பெண்களுக்குண்டான சுய வேலை வாய்ப்பை இத்திட்டம் வெகுவாக நிறைவு செய்யும்.  பணத்தை பட்டுவாடா செய்ய ஒவ்வொரு பெண்ணுக்கும் 11 பேர் கொண்டு குழு அமைக்கப் படும்.

5.பத்திரிக்கைகள் ஒரு தலை காதல் என்று எழுத கூடாது, பெண்கள் மீதான வன்முறை என்று தான் எழுத வேண்டும்.
 - நல்லா கேட்டுக்கோங்க பத்திரிக்கைகளே..., இனிமே வன்முறை, ஒரு தலை வன்முறை, கூடா வன்முறை, கள்ள வன்முறை, மச்சினி மேல் வன்முறை, பக்கத்து வீட்டு வன்முறை-ன்னு தான் எழுதணும்.  இது மக்கள் தொலைக்காட்சியில் உடனடியாக நடைமுறை படுத்தப் படும்.  தலைவர் டமில்குடிடாங்கி வீட்ல கூட வன்முறை திருமணம் நடந்துச்சாமே, மெய்யாலுமா..?!

6.பெண்களுக்கு தனி பள்ளி, தனி போக்குவரத்து வசதி, பாதுகாப்பான பொது இடம் அமைத்து தர வேண்டும்.
 - அப்படியே பெண்களுக்கான தனி கோயில், தனி சினிமா தியேட்டர், தனி கல்யாண மண்டபம், தனி விமானம்-கப்பல், தனி ஷாப்பிங் மால், தனி டாஸ்மாக் அனைத்தும் அமைத்துத் தரப்பட வேண்டும்.  கழிப்பிடம் பாதுகாப்பற்றது என்பதால் அடக்கிக் கொண்டு வீட்டில் மட்டுமே உபயோகப் படுத்த வேண்டும்.

7.பெண்களுக்கு எதிரான பிரச்சாரத்தை ஒடுக்க வேண்டும்.
 - ஆம்... மரக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும், பத்தலன்னா கா.வெ.கு. தலைமையில் ஹைவேயில் மிச்சம் மீதி உள்ள மரங்கள் வெட்டப்பட்டு உபயோகப் படுத்தப் படும்.

8.பெண் குழந்தைகளுக்கு செல்போன் வாங்கி கொடுப்பதை தடை செய்ய வேண்டும்.
 - அது கான்டியும் பத்தாது, பெண் குழந்தைகள் உள்ள வீட்டில் செல்போன், டெலிபோன், கிராமபோன், இயர்போன், ஹெட்போன், மெகாபோன், சாக்ஸோபோன், ஸ்பீக்கர்போன், பாலிபோன், மைக்ரோபோன் உள்ளிட்ட அனைத்து வகையான போன்களையும் தடை செய்ய வேண்டும்.  பொம்மை சைனா போன் கூட வாங்கித் தரக் கூடாது.

9.பெண்கள் வைத்திருக்கும் செல்போன்களை பெற்றோர்கள் கண்காணிப்பதோடு செக் பண்ண வேண்டும்.
 - இதற்காக ஏரியா வாரியாக தனித் தனிக் குழுக்கள் அமைக்கப் பட்டு அவர்கள் பெண்கள் வைத்திருக்கும் செல்போன்களையே எந்நேரமும் வெறிக்க வெறிக்க கண்காணிப்பார்கள்..  அவ்வப்போது செல்போனை பிடுங்கி சிக்னல், பேட்டரி, பேலன்ஸ் எல்லாம் சரியா உள்ளதா என செக் பண்ணுவார்கள்..!!

லேகியம் விக்கிறவனாட்டம் காதுல ஒரு மிசின மாட்டிக்கிட்டு விட்டத்த பாத்துக்கிட்டே "மாற்றம்-முன்னேற்றம்",  "மொத நாள், மொதா கையெழுத்து", "அன்புமணியாகிய நான்..."ன்னு அபிராமியை பாத்த குணா கணக்கா இருந்தவரை குணமாக்கிட்டு பழைய பன்னீர்செல்வமா திரும்பி வந்து அன்பு சகோதரியே, திராவிடத் தலைவரே, இளைஞர்களை கெடுக்கும் ரஜினியே-ன்னு அடுத்த ஆட்டத்தை ஆரம்பிங்க டாக்டர் சாரே...!!

எங்களுக்கும் பொழுது போகணும்ல...!!

4 comments :

  1. தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சிய இப்படியா கழுவுறது...

    ReplyDelete
    Replies
    1. அவுங்கள நிறுத்த சொல்...
      நான் நிறுத்துறேன்...!!

      Delete
  2. அட பாவி.. ரெண்டு நாள் ஊருல இல்ல அதுக்குள்ள இப்படி எல்லாம் ஆயிரக்கா ? அது சரி.. மொத்தமா நீங்களே கழுவி ஊத்தினா எப்படி? எங்களுக்கு கொஞ்சம் வைக்க கூடாதா?

    ReplyDelete
    Replies
    1. கவலையே படாதீங்க பாஸ்..., அவங்கள டெய்லி ஒரு பத்து நிமிசம் உத்து பாத்தீங்கனா போதும்..., ஏகப்பட்ட மேட்டர் சிக்கும்...!!

      Delete