Saturday 25 June 2016

தூங்கிப் போன சென்சார் தம்பி

"விபச்சார விளம்பரம் வந்தால் வியப்படையாதீர்" என சமீபத்தில் முத்துநிலவன் அவர்கள் எழுதிய பதிவில் நண்பர் விசு இட்ட மறுமொழியும், நம்பள்கி தளத்தில் அவ்வப் போது தொடர்ந்து வரும் இந்திய கலாச்சார பதிவுகளும் முன்னுரையாக...

சமீபத்துல கூட Udta Punjab படத்துக்கு சென்சார் ஏகப்பட்ட கெடுபிடி விதிச்சு அங்க வெட்டு, இங்க வெட்டுன்னு அறிவுறுத்த, கோர்ட்-லியோ "ரேட்டிங் கொடுக்கிறது மட்டுந்தான் உன் வேலை, வெட்டு-குத்து எல்லாம் நாங்க பாத்துக்குறோம்"ன்னு தீர்ப்பளித்து ஒரு வழியா படம் வெளிய வந்துடுச்சு.  படத்தையும் பாத்தாச்சு.   படத்தில் சகட்டுமேனிக்கு வரும் கெட்ட வார்த்தைகளுக்காகவும், சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் போதை மருந்து உட்கொள்வதை காட்டியதற்காகவும் "A" ரேட்டிங் கொடுக்கப் பட்டிருக்கலாம்.  ஆம்... 16 வயதிற்குட்பட்டவர்களுக்கு இப்படம் உகந்ததல்ல தான்.

இதே சென்சார் போர்டுதான் 1983-ல தூங்காதே தம்பி தூங்காதே-ன்னு ஒரு படத்த குழந்தை முதல் குடுகுடு கிழவி வரை அனைவரும் குடும்பத்துடன் கண்டு களிக்கலாம் என அனுமதி கொடுத்துள்ளது.  படத்தில் "சும்மா நிக்காதீங்க, நான் சொல்லும் படி வெக்காதீங்க..."ன்னு நீளமான ஆழமான கருத்துள்ள ஒரு பாடல்.  முதல்ல அதை ஒரு தபா நல்லா பாத்துருவோம்.
பாட்டுல நாயகனும் நாயகியும் குடுக்கிற மூவ்மென்ட், 'மானாட மயிலாட' 'சோடி நம்பரு' எல்லாத்தையும் தூக்கி சாப்பிட்டுருச்சு..., அதுலயும் குறிப்பா ஒளிஞ்சிருந்து பாக்கும் நாயகியின் தோழிகள் உணர்ச்சிவசப்பட்டு ஒருவரை ஒருவர் தழுவிக் கொள்வது கலாச்சரத்தின் உச்சம்.

அப்போ சினிமா தியேட்டருக்கு போய் தான் இந்த குடும்ப நாட்டியத்தை பார்த்து பரவச நிலையை அடைய வேண்டிய சூழல் இருந்தது.  ஆனா இப்போ அப்பப்போ ஏதாவதொரு ம்யூசிக் சேன்னல்ல அடிக்கடி போட்டுறாங்க, அதுவும் மிட்நைட் மசாலாவுல எல்லாம் இல்லாம நினைச்ச நேரத்துல ஓட்டி விடுறாங்க... அனைத்தும் சென்சார் அனுமதியுடன்...

இவங்கதான் Udta Punjab-ம், ஆரண்ய காண்டமும், புதுப்பேட்டையும் சமூகச் சீரழிவை தூக்கிப் பிடிக்கின்றனன்னு, வெட்டுக்களும், 'A" ரேட்டிங்கும் தருகிறவர்கள்.

சிறுவயதில் "ராணி"யோ, "குங்கும"மோ ஏதோவொரு பத்திரிக்கையில் நடிகை ஸ்ரீப்ரியாவின் ஒரு பேட்டியை படித்த போது அதிலொரு கேள்வி,
"ஐரோப்பாவில் உங்களை வெட்கப் பட வைத்த விஷயம்?"
அவரின் பதில், "தெருவில் முத்தமிடுவது...!!"
ம்ஹ்ம்... வெள்ளைக்காரன் இந்தப் பாட்ட பாத்திருந்தான்னா நம்மாளுகளுக்கு விஸா குடுக்கிறதுக்கு ரொம்ப யோசித்திருப்பான்...!!  பின்ன பட்டப்பகல்ல சின்ன புள்ளைங்க வந்து போற பார்க்குல ஜலபுலஜன்க்ஸ் பண்றவங்க நம்மூருக்கு வந்தா நம்ம கலாச்சாரம் என்ன ஆகித் தொலையுமோன்னு அவன் யோசித்திருப்பான்ல...!!

பைனல் பஞ்ச்:  "ஆனா ஒன்னு... தூங்காதே தம்பி தூங்காதே..."ன்னு கரெக்ட்டா பேரு வெச்சுருக்கான்யா..."

சப்போர்டிவ் டாக்குமென்ட் :
 
 



Monday 20 June 2016

RIP சரித்திரம்

அதிர்ச்சி, கவலை, ஆத்திரம் இதெல்லாம் ஒன்னா வரணும்னா..., மேற்கொண்டு படிங்க...

பொதுவாக அந்தந்த கட்சியை அல்லது ஜாதியை சேர்ந்த பத்திரிக்கையோ, டிவியோ அவங்களுக்கு ஏத்தா மாதிரி செய்திகளை போட்டு நமக்கு நாமேன்னு சொறிஞ்சிக்கிறது இப்போ நமக்கெல்லாம் பழகிப் போச்சு.  அவங்கவங்களுக்கு புடிச்ச நாலாவது தூணை போய் கட்டி புடிசிச்சுக்கலாம்.  ஆனா குழந்தைகளோட பாடத் திட்டத்துல அநியாயத்துக்கு அடிச்சு விட்டத சமீபத்துல படிக்க நேரயில தான் சத்தியமா எந்த மாதிரி நாட்டுல வாழுறோம்னு தோணுச்சு...!!

ஆறாம் வகுப்பிற்கான CBSE பாடப் புத்தகத்தில் அசைவம் சாப்பிடுபவர்கள் ஏமாற்றுபவர்களாகவும், பொய் சொல்பவர்களாகவும், நேர்மையற்றவர்களாகவும், வாக்குத் தவறுபவர்களாகவும், தீய வார்த்தைகள் பேசுபவர்களாகவும், திருடுபவர்களாகவும், வன்முறையாளர்களாகவும், பாலியில் குற்றங்கள் செய்பவர்களாகவும் இருப்பார்கள் என குறிப்பிடப் பட்டுள்ளது.  கீழுள்ள link-ஐ சுட்டிப் பார்க்கவும்.

இப்போ இந்தக் குறிப்பை எழுதுனவன், அச்சிட்டவன், வெளியிட்டவன் எல்லாம் யாருன்னு ஆராயத் தேவையில்லை, அவனுங்க யாருன்னு எல்லோருக்கும் நல்லாவே தெரியும்.  அவனுங்கள திருப்பி நாண்டுக்கிட்டு சாகிற மாதிரி நாலு இல்ல, நானூறு கேள்வி கூட கேட்க முடியும்.  ஆனா, ஒட்டு மொத்த சமூகத்தின் மேலயும் இப்படியொரு அநியாயத்தை சுமத்தும் அதிகாரத்தைக் குடுத்த இந்த சிஸ்டத்தை அல்லது ஆட்சியை தேர்ந்தெடுத்த நம்மள என்ன சொல்றது?

குஜராத்திய பாடப் புத்தகத்தில் "Internal achievements of Nazism," என்ற தலைப்பில் "Hitler lent dignity and prestige to the German government within a short time, establishing a strong administrative set-up."என சொல்லப் பட்டிருக்கிறதாம்.

செம காமெடி என்னான்னா, சைவம் மட்டுமே சாப்பிட்டு வந்து, பின் கற்பழிப்பு வழக்கில் கைதான ஜாமியார் ஆசாரம் பாபு ராஜஸ்தானின் 3-ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் சிறந்த புனிதர்களில் ஒருவனாக காட்டப் பட்டிருக்கிறது.  கூடவே நம்ம ஜில்பா ஜெட்டிக்கு யோகா சொல்லிக் குடுத்த பாபா ராம் தேவும்...!!

குஜராத் பாடத்திட்டத்தில் மற்றுமொரு வரலாற்றுப்(!!) பதிவு.  "கடவுள் ரொட்டி சுடும் போது முதலில் வெந்தும் வேகாமலும் பொறந்தவன் வெள்ளைக்காரனாகவும் , அடுத்ததா கருகிப் போய் பொறந்தவன் கறுப்பர்கள்ன்னும் ஆகிடுகிச்சாம்.  முதல் ரெண்டு தவறுகளுக்கு அப்புறம் கரெக்ட்டா சுட்ட ரொட்டி இந்தியர்களாம்..."

The National Council of Educational Researchன்னு ஒன்னு இருக்காம், அது என்னமோ படிச்சவங்களுக்குத் தானே தெரியும் போல, அவங்க ஒரு மேட்டர் விட்டிருக்காங்க பாருங்க.., சோனியா காந்தி, பர்வேஸ் முஷாராஃப், ஜார்ஜ் புஷ், இவிங்கெல்லாம் மிகப் பெரும் தலைவர்களாம்...!!

அடுத்தது இன்னும் பயங்கரம், வாத்ஸாயனருக்கே அடுக்காது... 
"Lesbianism is a product of "unnaturally intense friendships... where outlets for a more normal sex drive do not exist" or even a "faulty environment" and claims that the "accompanying deep love... may lead to suspicion, jealousy, suicide or murder"
இது ஏதோ இஸ்கூலு புக்ல வந்துச்சான்னு நினைக்காதீங்க, AIIMS-யுடைய சிலபஸ்ல http://www.aiims.edu/aiims/academic/aiims-syllabus/Syllabus%20-%20MBBS.pdf, Forensic Medicine-ன்ற தலைப்புல இருக்கு... https://books.google.co.in/books?id=cLemGip2794C&pg=PA216&lpg=PA216&dq=tribadism+forensic+medicine+india&source=bl&ots=gS3OFioVZi&sig=PXrb6mnfQD-GZyiHqN4_hUAAd0I&hl=en&sa=X&ei=U5KSVb7AD8mwuATSk4DwAQ&ved=0CC8Q6AEwAw#v=onepage&q=tribadism%20forensic%20medicine%20india&f=true

மேலும் இதுபோன்ற தரித்திர, ஸ்லிப் ஆகிடுச்சு, சரித்திர நிகழ்வுகளுக்கு இந்த link-ல http://www.scoopwhoop.com/inothernews/indian-school-textbooks-contained-really-disturbing-things/ போய் பார்க்கலாம்.  கல்கி, சாண்டில்யனை எல்லாம் கலங்கடிக்கும் பல வரலாற்று குறிப்புகளை கண்டு குமுறலாம்...

இதில் பலதும் பழைய செய்திகள் என்றாலும் ஒட்டுமொத்தமாக தற்போது பார்க்க நேர்ந்ததால் இப்பதிவு.  அஞ்சு வருச ஆட்சி முடியங்காட்டியும், IAS, BSRB, கோன் பனேகா க்ரோர்பதி, LKG எல்லாத்துக்கும் இருந்துதான் கேள்விகள் கேப்பாய்ங்க போல..!!


Sunday 12 June 2016

அறிந்தும் அறியாமலும் - 2

சில மாதங்களுக்கு முன் அறிந்தும் அறியாமலும் என்றொரு பதிவை எழுதியிருந்தேன்.  அதைப் படித்த சகபயணி என்ற பதிவர் ஓர் அழகிய நீண்ட பின்னூட்டமிட்டிருந்தார்.  மேலும் பாலியல் குறித்த தனது பதின்வயது அறியாமையையும் அனுபவங்களையும் அருமையாக  ஒரு பதிவாகவே எழுதியிருந்தார்.  என்ன காரணத்தாலோ அதை நீக்கி விட்டார்.  தொடர்ந்து மேலும் எழுதலாம் என எண்ணியதே காயத்ரி எழுதிய பீரியட்ஸ், மற்றும் சுய இன்பம் குறித்த இரண்டு பதிவுகளும் தான்.  அவசியம் படிக்கவும்.

வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நானும் மனைவியும் இது குறித்த எமது சிறுவயது நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டிருந்தாலும், "அறிந்தும் அறியாமலும்" முதல் பாகத்தை படித்த பிறகு அம்மணி தன்னுடைய அனுபவங்களை ஒரே கோர்வையாக மீண்டும் விவரித்த போது..., பாட்டாவே படிச்சிடலாமான்னு தோன்றியதன் விளைவே இந்த 2-ம் பாகம்.

பருவமடைவது தொடர்பாக அவருக்கு எந்தவித அறிவூட்டல்களும் பெற்றோரோ, தோழிகளோ, ஆசிரியர்களோ சொல்லித் தரவில்லை.  பாட்டி மட்டும் அவ்வப்போது ஏதாவது கேட்டு வைக்க புரிந்தும் புரியாமலும் இருந்துத் தொலைத்திருக்கிறது.  உடன் படிப்பவர்கள் திடீரென நாலைந்து நாட்கள் லீவுக்குப் பிறகு வந்தால் மற்றவர்கள் குசுகுசுவென "யே.. அவ வயசுக்கு வந்துட்டாடி.." என்ற பேச்சைத் தவிர வேறேதும் அவர்கள் அறிந்திருக்கவில்லை.

ஒரு விடுமுறை நாளில் ரத்தக் கசிவு ஏற்பட்டு உள்ளாடை நனைய திகீரென்றாயிருக்கிறது.  முதலில் பயம்.., பின் ரத்தம் எங்கிருந்து வருகிறது என்ற குழப்பம்.., அது தெரிந்ததும் மேலும் அதிக பயம்..!!

வீட்டிலுள்ளவர்களிடம் சொல்லத் தயங்கி தானே கழுவி சுத்தம் செய்து உள்ளாடையை குப்பையில் வீசியிருக்கிறார்.  மனதில் பல சந்தேகங்கள்...
பூச்சி ஏதும் கடித்திருக்குமா?
புற்று நோயாக இருக்குமோ? (அதுக்கு வாயில தானே ரத்தம் வரும்!!)
உடலில் சாத்தான் புகுந்திருக்குமோ! (இயேசுவின் ரத்தம் ஜெயம்!!)
தொடர்ந்து ரத்தம் வெளியேறினால் செத்துப் போய் விடுவோமோ?!
வயிற்று வலியினூடே அரைத்தூக்கத்தில் இரவு கழிந்து விடிந்து பார்த்தால் மீண்டும் உடையெல்லாம் ரத்தம்... மறுபடியும் துணியை குப்பையில் வீசியிருக்கிறார்.

இரண்டு நாட்களில் உபத்திரவம் தொலைந்தாலும் பயம், பதட்டம் எல்லாம் நீங்கி சகஜ நிலைக்குத் திரும்ப ஒரு வாரம் ஆகியிருக்கிறது.  மீண்டும் பள்ளி, தோழிகள், விளையாட்டு எனக் கழிய சரியாக 28 நாட்கள் கழித்து மீண்டும் அதே அனுபவம்.  இம்முறை அழுக்குத்  துணியோடு சேர்த்துப் போடப்பட்ட ரத்தக்கறை துணியை வேலைக்காரம்மா பார்த்து விட, தினத்தந்தியில் போடாதது ஒன்று தான் குறை.

கவனிப்புன்னா சும்மா அப்படியொரு கவனிப்பு அடுத்து மூன்று நாட்களுக்கு.., அத்தைகள், சித்திகள், பெரியம்மாக்கள், அக்காள்கள் என ஆளாளுக்கு லீவு போட்டுட்டு கண்டதையும் திங்கடிக்க செய்திருக்கிறார்கள்.  இதனிடையே அவருக்கு கொடுக்கப் பட்ட விளக்கம், "நீ பெரியவளாயிட்ட, இனி மாசா மாசம் இப்படித்தான் ஆகும், அதுக்கு நாப்கின் வாங்கி வெச்சுக்கணும்.., அந்த நாள் வந்துச்சினா ஸ்கூலுக்கு கையோட நாப்கின்ன கொண்டு போயிடணும், பசங்களோட விளயடாக் கூடாது, ரோட்ல பசங்களோட நின்னு பேசக் கூடாது"ன்னு பல உபதேசங்கள் இருந்தாலும் ஜெர்க் ஆன ஒரே விஷயம், "இந்த கொடுமை மாதமொருமுறை  நடக்கும்" என்பது தான்.

வீட்ல திருவிழா முடிஞ்சு ஒரு வாரம் கழித்து ஸ்கூலுக்கு போகும் போதே வெட்கம் பிடுங்கித் தின்றிருக்கிறது.  நமட்டுச் சிரிப்புடன் மிஸ் அனுமதிக்க, வயசுக்கு வந்த புள்ளைகள் வெல்கம் டு த க்ளப் என்பது போல் பார்க்க, வராத புள்ளைகள் "யே... அவ வயசுக்கு வந்துட்டாடி.."  என குசுகுசுப்பைத் தொடர்ந்தனர்.

பின்னாளில் ஒரு நாள் தன்னுடைய கல்லூரிக் காலத்தில் ஒரு மாலை வேளையில் என்னைச் சந்திக்க நேர்ந்து (அது ஒரு தனிக்கதை) பின்பு மையலுக்கும் உடன்போக்கிற்கும் இடைப் பட்ட ஒரு காலத்தில் தன் அக்காவிடம் சென்று, "முத்தமிட்டால் குழந்தை பிறக்குமா?" எனக் கேட்டுள்ளார்.
google-ம் நண்பர்களும் நமக்கு சொல்லாத, ஆனால் மிக அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் sex.  குழந்தை பெற்றுக் கொண்டு மீசையை முறுக்கி விட்டு சந்ததியை உருவாக்க மட்டுமன்றி மனமும் உடலும் நலமாக நார்மலாக இருக்க முறையான sex தேவைப் படுகிறது.  தம்பதிகள் சராசரியாக  வாரம் ஒரு முறையாவது வைத்துக் கொள்வது அவசியமாகிறது, அதிகபட்சமாக எத்தனை முறை வைத்துக் கொள்ளலாம் என்பது அவரவர் சொந்த விருப்பம், உடல் தகுதி பொறுத்து அமையும்.  சேலம் சி.சி.வைத்தியர் சொல்வது போல எந்த சக்தியும் விரயமாகப் போவதில்லை...

கருவுருதலை இன்னமும் பலர் கடவுளின் செயல் என நினைத்துக் கொண்டிருப்பதும், குழந்தை வரம் என அதை புனிதமாக்குவதும், தாமதமானால் சொந்தக்காரர்களின் கேள்விகளை எதிர்கொள்ள தயங்குவதும் போன்ற அபத்தங்களை உடனடியாக தூக்கி கடாசி விட்டு உடலுறவு, கருவுறுதல், குழந்தை பெறுதல் அனைத்தும் அறிவியல் சார்ந்த விஷயங்கள் என்ற mind set நமக்கு ஏற்படுத்திக் கொள்வதோடன்றி குழந்தைகளுக்கும் காலப் போக்கில் சொல்லித் தருதல் அவசியப் படுகிறது.

நல்ல ஆரோக்கியமான திருப்தியான உடலுறவுக்கு அர்னால்ட், ஏஞ்சலினா போல் இருக்க வேண்டும் என்பது அவசியமல்ல.  உடலை ரொம்ப போட்டு வருத்திக் கொள்வதோ வருந்திக் கொள்வதோ தேவையல்ல.  நல்ல உணவு, கொஞ்சம் உடற்பயிற்சி மற்றும் நல்ல தூக்கம் இருந்தால் போதுமானது.  படுக்கையில் தேவைக்கேற்றபடி, விருப்பத்திற்கேற்றபடி மாறிக் கொள்வதோ ஏற்றுக் கொள்வதோ மிக நன்று.  உடலுறவு என்பது சுத்தத்தைப் பற்றியது அல்ல, பிறப்புறுப்பில் உள்ள கிருமிகளைவிட பலமடங்கு மோசமான அதிகமான கிருமிகள் நமது வாயில் உள்ளன.  இருப்பினும் குளித்துவிட்டு மெலிதான deo spray போட்டுக் கொண்டு மெல்லிய வெளிச்சத்தில் ஈடுபடுவது நலம்.  ஐம்புலன்களும் திருப்தி அடைய வேண்டுமல்லவா..!!

ஆரம்பிக்கும் முன் உணர வேண்டிய முதல் சமாச்சாரம் சாதாரண தொடுதலுக்கும் கலவிக்குண்டான சீண்டலுக்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்திருக்க வேண்டும்.  சிலருக்கு பிடித்திருக்கும், சிலருக்கு பிடிக்காது.  உடற்கூற்றின் படி ஆண்களை விட பெண்களுக்கு அந்த நேரத்தில் சீண்டல்கள் நிரம்பப் பிடிக்கும்.  வருந்தத் தக்க ஒரு விஷயம் என்னன்னா பெரும்பாலான தம்பதிகள் உடலுறவைப் பற்றி நிறைய பேசுவதே இல்லை.  இந்த மேட்டர்ல நேரான நேர்மையான விருப்பு வெறுப்புக்களை பேசலானா வேற எதுல பெருசா பேசித் தீத்துடுவீங்க..!?

திருமணம் ஆகாதவர்கள் என்றால் உங்கள் பார்ட்னரை sex-க்கு வற்புறுத்துவதோ, அவர்களை உணர்வுப் பூர்வமாக blackmail செய்வதோ வேண்டாம்.  அது உங்களைப் பற்றிய தவறான எண்ணங்களை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம்.  நீங்கள் ஒரு அன்புக்குரியவராக அல்லாமல் அலைச்சல் பார்ட்டியாக அர்த்தம் கொள்ளப் படலாம்.  எல்லாவற்றிலும் போல sex-லும் அடுத்தவர்களின் உணர்வுக்கே முதலிடம் அளிக்கப்பட வேண்டும்.

உங்கள் பார்ட்னர் பொறாமைப் படவேண்டும் என்பதற்காக அடுத்தவர்களைப் பார்த்து கமென்ட் அடிக்க வேண்டாம், மிக முட்டாள்த்தனமான செயல் அது.  sex-ம், உறவும் சேர்ந்திருத்தலும் அவரவர் அணுகுமுறையைப் பொருத்தது.  உங்கள் திருப்தியையும் உங்கள் பார்ட்னரின் ஆசைகளையும் செயலில் இறங்கும் முன் பேசி, புரிந்து தீர்த்துக் கொள்ளுங்கள்.

எப்பொழுது இதைப் பற்றி நாம் நம் குழந்தைகளிடம் பேசப் போகிறோம்? அவர்களுடைய வயதையும் பக்குவத்தையும் பொருத்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பேசுவோம்.  எடுத்த எடுப்பில் அனைத்தையும் கொட்டிவிடப் போவதில்லை, சிறு சிறு விஷயங்களில் இருந்து ஆரம்பிக்கலாம்..!!
 தீவிரவாதம், குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்முறை, இன்டர்நெட் பலான படங்கள் போன்றவற்றை ஒரே நாளில் ஒழித்துவிட முடியாது.  குழந்தைகளை பாதுகாப்பாக இருக்கச் சொல்லி கற்றுத் தருவதுதான் பெற்றோர் கடமை.  அதற்காக ஒன்னுமே தெரியாமல் வளர்ப்பதும் ஆபத்தில் முடிய வாய்ப்புள்ளது.  அப்பாவியாக இருந்து விடாமல் அந்தந்த பருவ வயதிற்கேற்ற விளையாட்டு, வேடிக்கைகளுடன் அவர்கள் வளர்வதே சிறந்தது.

உங்கள் பதின்ம வயது மகனோ மகளோ நண்பர்களுடன் வெளியே செல்கிறேன் என்றால், அனுமதியுங்கள்.  இளவயதில் நாலு இடம் போய் வந்து பழகுவது பின்னாளில் அவர்களுக்கு வரும் எந்தவொரு சங்கடத்தையும் சமாளிக்க உதவும்.  தேவையான அளவு பணம் கொடுத்து பாதுகாப்பாக இருக்கச் சொல்லி அறிவுறுத்தி அனுப்பி வைக்கலாம்.  அதை விடுத்து "உன்னுடன் யார் யாரெல்லாம் வர்றாங்க, அதுல எத்தன பசங்க, எத்தன பொண்ணுங்க" இது மாதிரியெல்லாம் கேட்டா அவர்களின் மூளை உடனடியாக தற்காப்பு mode-ல் வேலை செய்து பொய் பேசி சமாளிக்கலாம்.  அல்லது பெற்றோர் நம்மை நம்பவில்லையோ என்ற எண்ணம் தோன்றலாம்..!!

குழந்தைகளை நம்புங்கள், அவர்கள் தன்னம்பிக்கையுடன் வளர்வார்கள்.  குழந்தைகளுக்கு நாம் அருகில் இருத்தல் பிடிக்கும் அவர்களை நாம் ஊடுருவவது தெரியாமல் இருக்கும் வரை...!!  ஒவ்வொரு குழந்தைக்கும் "தான், தன், சுய" என ஒன்று தேவைப் படுகிறது.  பெரும்பாலான இளைஞர்கள் தங்கள் பெற்றோர் தங்களைப் புரிந்து கொள்வதில்லை என்று அலுத்துக் கொள்வது இதற்காகத்தான்.  தலைமுறை இடைவெளி என்பதை மாற்ற இயலாது.  உதாரணமாக அவர்களுக்கு வரும் பார்சலை பிரித்தல், அவர்கள் போனை எடுத்து நோண்டுதல் போன்ற வேலைகளை செய்தால் நம்மை தாண்டிச் செல்ல என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.  குழந்தைகளுடன் நட்புடன் இருங்கள், அவர்களின் நம்பிக்கையை சம்பாதியுங்கள், குழந்தைகளை நம்புங்கள்...!!

முடிந்தால் பிறிதொரு சமயம் "அறிந்தும் அறியாமலும் -3"ல் சந்திக்கலாம்.

அன்புடன்
மலர்வண்ணன்

Monday 6 June 2016

கொங்குநாட்டு என்'கவுன்டர்' ஏகாம்பரங்கள்...

தேர்தல் முடிந்து சீமானையும், வைகோவையும், கேப்டனையும் எவ்ளோ முடியுமோ அவ்ளோ ஓட்டி facebook, twitter, insta, extra மற்றும் இன்னபிற வலைதள ஒறவுகள் சற்றே இளைப்பாறி அடுத்த இரைக்காக காத்திருந்த அந்த அற்புத தருணத்தில் தானாகவே வந்து சிக்கின கொங்குநாட்டு ஒறவுகள்.

சாம்பிள் 1:
வெண்ணீராடை மூர்த்தி சொல்றாப்பல "பாத்த உடனேயே சும்மா குபீர்னு கெளப்பிக்கிட்டு வரும்"..... சிரிப்பு...!!
அதுவும் ஒரு கரீபியனை ஊரு, கிராமம், சாதி உட்பிரிவு முதற்கொண்டு போட்ட இந்த பூகோள புல்பாயில ஏதோ போனா போகுதுன்னு மூத்திர சந்துல வெச்சு ஒரு முப்பது பேரு மூணு நாளு மட்டும் வெச்சிருந்து அடிச்சிட்டு விட்டுட்டாங்க...  ஆனா அது எவ்ளோ பெரிய தப்புன்னு அப்புறந்தான் தெரிஞ்சது...

சாம்பிள்:2
வள்ளல் வம்சம்ன்றதக் கூட ஏதோ காட்டை வித்து கள்ளு குடிச்ச பரம்பரைன்னு பெருமையா சொல்லிக்கிறாங்களேன்னு சோடாவையும் ஜெலுசிலையும் சேத்து சாப்பிட்டு ஜீரணிச்சுக்கலாம்... ஆனா, திருப்பதில சந்திரபாபுநாயுடு லட்டுக்கு பதிலா ஜாங்கிரி குடுத்த கணக்கா, வெள்ளைக்காரனே வங்கியில "counter"ன்னு பேரு வெச்சான்னு வுட்டாங்க பாருங்க...

ஆதலால் ஒறவுகளே..., பரத்வெயிட் மற்றும் வங்கிக் கவுன்ட்டர் வரலாற்று உண்மைகளைத் தொடர்ந்து, கொங்கு மண்டல வருங்கால சந்ததியினருக்கு மேலும் பல சரித்திர ஆராய்ச்சிகளுக்கான குறியீடுகள்...!!

  • counteract - கவுண்டர்கள் நடிப்பில் சிறந்து விளங்கியதால் உருவான சொல்...
  • counterassault - அசால்ட்டாக காட்டை வித்து கள்ளு குடிச்ச கவுண்டன பாத்து சொன்ன வார்த்தை...
  • counterattack - புலியை முறத்தால் தாக்கிய கவுண்டப் பெண்மணியின் வீரம் செறிந்த குறிப்பேடு...
  • counterweight - டமில்நாட்ல எங்க போனாலும் கவுண்டன் தான் வெயிட்டு...
  • counterview - கவுண்டனின் பார்வையில்...!!
  • counterpart - பார்ட் பார்ட்டா வேல பாக்குறது கவுண்டர் மட்டுந்தான்...!!
  •  countercheck - கண்டறியும் கவுண்டர்கள்... 
  • counterfires - தீயா வேலை செய்யும் கவுண்டர்ஸ்...!! 
  • counters - கவுண்டர்கள்... 
  • counterpunch - பஞ்ச் டயலாக் பேச கவுண்டன விட்டா ஆள் கிடையாது...
  • counterplay - சின்னகவுண்டர் பம்பரம் தொடங்கி அனைத்து விளையாட்டிலும் சிறந்தவர்கள் கவுண்டர்களே...!!
  • counterfoil - புல்பாயில், ஆப்பாயில், கவுண்டர்பாயில்  அல்லாத்தையும் கண்டுபுடிச்சது கவுண்டர் தான் கண்ணு...
  • countersign - அந்தா தெரியுது பாரு, அதான் நம்ம கவுண்டரு கைகாட்டி...
  •  counterpose - சுபாஷ் சந்திர போஸ் கவுதாரி குல கவுண்டர் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?! 
  • counterpoint - ஹி... ஹி....!!


"எம் பேரு ஏகாம்பரம், எனக்கு இன்னொரு பேரு இருக்கு..., என்"கவுன்ட்டர்" ஏகாம்பரம்...!!

இது போன்ற மேலும் பல சுவையான அரிய தகவல்களுக்கு சுட்டவும்  வீரம்டா, மானம்டா, சாதிடா...!!