முகநூலில் முன்பு நான் எழுதிய தங்கம் வாங்கிய கதை பதிவாக....
"தங்கம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை" என விதிமுறைகளை அறிவுறுத்தும் பதிவல்ல இது... அப்படி எதிர்பார்த்து வந்து யாரும் ஏமாற வேண்டாம் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
மிச்சம் மீதி கொஞ்சம் காசு கையில இருந்தாலும் இவன் எங்கேயாவது டூர் அடிக்க கெளம்பிருவான்ட்டு தங்கம் வாங்கலாம்னு தங்கமணி நம்மள 11.11.12 அன்று சென்னை தாம்பரம் சானிடோரியத்திலுள்ள GRT நகைக் கடைக்கு கூட்டிட்டு போனாங்க... "இனிமே எங்கூட கடைக்கு வருவியா"ன்னு நமக்கு தோணுற வரைக்கும் தேடிக்கிட்டே இருந்தாங்க... "கடை என்ன விலை"ன்னு கேக்காதது ஒன்னு தான் பாக்கி. இறுதியா 7 கிராம் எடையுள்ள தோடு ஒரு ஜோடிய ஒருவழியா புடிச்சிட்டாங்க. எனக்குள்ள ஜன்லோக்பல்லே நிறைவேறிய திருப்தி.
"தங்கம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை" என விதிமுறைகளை அறிவுறுத்தும் பதிவல்ல இது... அப்படி எதிர்பார்த்து வந்து யாரும் ஏமாற வேண்டாம் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
மிச்சம் மீதி கொஞ்சம் காசு கையில இருந்தாலும் இவன் எங்கேயாவது டூர் அடிக்க கெளம்பிருவான்ட்டு தங்கம் வாங்கலாம்னு தங்கமணி நம்மள 11.11.12 அன்று சென்னை தாம்பரம் சானிடோரியத்திலுள்ள GRT நகைக் கடைக்கு கூட்டிட்டு போனாங்க... "இனிமே எங்கூட கடைக்கு வருவியா"ன்னு நமக்கு தோணுற வரைக்கும் தேடிக்கிட்டே இருந்தாங்க... "கடை என்ன விலை"ன்னு கேக்காதது ஒன்னு தான் பாக்கி. இறுதியா 7 கிராம் எடையுள்ள தோடு ஒரு ஜோடிய ஒருவழியா புடிச்சிட்டாங்க. எனக்குள்ள ஜன்லோக்பல்லே நிறைவேறிய திருப்தி.
நாம
போன வேலை இனிமேதானே ஆரம்பம். கடைக்காரங்க மதிப்பை ஒரு துண்டு சீட்டில்
கிராம் ஒன்றுக்கு ரூ.2891, 7 கிராம் ரூ.20237, சேதாரம் 18% ரூ.3642 ,
மொத்தம் ரூ.23879 என அச்சடித்துக் கொடுத்தார்கள். "இன்னைக்கு இவங்களா"ன்னு
மனசுக்குள்ள சிரிச்சுக்கிட்டே "18% எல்லாம் கொடுக்க முடியாது, பாத்து
செய்ங்க" என மெதுவாக ஆரம்பித்தேன்..
"மேனேஜர் கிட்ட பேசிப் பாருங்க" என்றார்கள்..
"நீங்களே பேசிக்கோங்க, இல்லாட்டி மேனேஜரை இங்க வரச் சொல்லுங்க" என்றேன்...
உலகவங்கி ஓனரு உகாண்டாவுக்கு கடன் குடுக்கிற ரேஞ்சுக்கு முகத்தில் பல சுருக்கங்கள் விழ அவர் கால்குலேட்டரை மீண்டும் மீண்டும் லொடலொடவென தட்டி சேதாரத்தை 15% ஆக குறைத்துக் காட்டி, "இவ்ளோ தான் சார் முடியும்"ன்னார். "சேதாரம் 18% அல்ல, 25% கூடப் போடுங்கள், தரத் தயாராயிருக்கிறேன், ஆனால் சேதாரம் ஆன தங்கத்தை என்னிடமே கொடுத்து விடுங்கள், ஏனென்றால் அதற்கும் சேர்த்துத்தானே என்னிடம் வசூலிக்கப் போகிறீர்கள்... அந்தத் தங்கம் என்ன நிலையில் இருந்தாலும் நான் எடுத்துக் கொள்கிறேன், உமியோடு இருந்தாலும் சரி, திரவமாக இருந்தாலும் சரி, செம்புடன் கலந்திருந்தாலும் சரி, நான் கொடுத்த காசுக்கு என் தங்கம் என்னிடம் வர வேண்டும், அதை நான் என்னமோ செய்து கொள்கிறேன், என் தங்கம் எனது உரிமை..!! தம்பி கொஞ்சம் தண்ணி கொடு..." என்றேன்.
அவர் சீட்டை எடுத்துக் கொண்டு எங்கோ போனார், சிறிது நேரம் கழித்து சரவணபவன் சூப்பர்வைசர் போல் ரெண்டு பேரை உடன் கூட்டி வந்தார். அவர்கள் சற்றே தோரணையுடன் "அப்படியெல்லாம் செய்ய முடியாது சார்" என்றார்கள்.
"எதை செய்ய முடியாது?"
"நீங்க கேக்கிற மாதிரி சேதாரத்தை குறைச்சு போடவோ, சேதாரத் தங்கத்தை கொடுக்கவோ முடியாது.."
"வெல்... உங்களுக்கு மூன்று options தருகிறேன்...
1. செய்கூலி, சேதாரம் இரண்டிற்கும் சேர்த்து 5% தருகிறேன்..
2. 18% தருகிறேன், ஆனால் அதற்கு நீங்கள் எனக்கு சேதாரம் ஆன தங்கத்தை தர வேண்டும், அல்லது ஏன் தர இயலாது என்ற விளக்கத்தை உங்கள் பில்லுடன் சேர்த்து எழுத்து மூலம் தர வேண்டும்..
3. எனக்கு தங்கம் விற்பனை செய்ய முடியாது என்று உங்கள் வாயாலே சொல்லிவிடுங்கள், நான் சென்று விடுகிறேன்" என்று சொன்னேன்.
அம்மணி, நம்மள பாத்து "எழவக் கூட்டிட்டியா..?! 10% கேட்டா கொடுத்திடுவாங்க, முடிச்சிட்டு வா, போலாம்"ன்னு சொல்ல,
"இது உங்கம்மா வீட்டுல புள்ளைக்கு குடுக்கிற சீதனமா இருந்தா பரவாயில்ல,.. நம்ம வாங்கறதாச்சே... அதுவுமில்லாம செலக்ட் பண்ண நீ எடுத்த நேரத்துல பத்துல ஒரு பங்குதான் நான் எடுக்கப் போறேன், காத்திரு" என்றேன்.
"எனக்குத் தெரியாது, எனக்கு அந்தத் தோடு வேணும்..." என கட்டளையிட அடிவயிற்றில் பேப்பர் வெயிட் ஒன்று உருண்டது.
அவர்கள் அங்குமிங்கும் நடந்தார்கள், யாராரிடமோ பேசினார்கள், என்னை தனியே அழைத்தார்கள், வர முடியாது என சொல்லிவிட்டு சர்விலன்ஸ் கேமராவில் முகம் நன்கு தெரியுமாறு உட்கார்ந்து கொண்டேன். மனதில் பல ஐடியாக்கள் ஓடின. நண்பர்களில் மனித உரிமை ஆர்வலர், வக்கீல் போன்றோரது நம்பர்கள் செல்போனில் இருக்கிறதா என பார்த்துக் கொண்டேன்.
சரியான காரணத்தை விளக்காமல் நுகர்வோருக்கு பொருளை விற்பனை செய்ய முடியாது என்று யாராலும் சொல்ல இயலாது, சொல்லவும் கூடாது; விற்க மறுத்தால் சரியான காரணம் சொல்லாமல் என்னை தட்டிக் கழித்தது, நுகர்வோருக்கு பொருள் விற்பனை செய்ய மறுத்தது, வெகுநேரம் என்னை அங்கு அமரச் செய்தது என பல காரணங்களுக்காக எனக்கு அவர்கள் தண்டம் அழ வேண்டியிருக்கும்; அங்கிருந்த பிற வாடிக்கையாளர்களும், சர்விலன்ஸ் கேமராவுமே சாட்சிகள், வாடிக்கையாளர் சட்டத்திற்கு புறம்பாகவோ, வரம்பு மீறியோ நடந்தால் மட்டுமே வெளியேற்றப் படலாம் போன்றவை மனதில் ஓடிக் கொண்டே இருந்தன...
இதனிடையே, "பாத்தீங்களா அநியாயத்தை.." என துணைக்கு சில என்னைப் போன்ற அப்பாவி கணவன்களையும் அழைத்துக் கொண்டேன். இறுதியாக 6% ஆக குறைத்து எடுத்து வந்தார்கள். திருப்தியாக வாங்கிக் கொண்டு, திண்டுக்கல் வேலு ஹோட்டலில் மட்டன் பிரியாணியும் மூளை வருவலும் சாப்பிட்டு வந்தோம்.
"மேனேஜர் கிட்ட பேசிப் பாருங்க" என்றார்கள்..
"நீங்களே பேசிக்கோங்க, இல்லாட்டி மேனேஜரை இங்க வரச் சொல்லுங்க" என்றேன்...
உலகவங்கி ஓனரு உகாண்டாவுக்கு கடன் குடுக்கிற ரேஞ்சுக்கு முகத்தில் பல சுருக்கங்கள் விழ அவர் கால்குலேட்டரை மீண்டும் மீண்டும் லொடலொடவென தட்டி சேதாரத்தை 15% ஆக குறைத்துக் காட்டி, "இவ்ளோ தான் சார் முடியும்"ன்னார். "சேதாரம் 18% அல்ல, 25% கூடப் போடுங்கள், தரத் தயாராயிருக்கிறேன், ஆனால் சேதாரம் ஆன தங்கத்தை என்னிடமே கொடுத்து விடுங்கள், ஏனென்றால் அதற்கும் சேர்த்துத்தானே என்னிடம் வசூலிக்கப் போகிறீர்கள்... அந்தத் தங்கம் என்ன நிலையில் இருந்தாலும் நான் எடுத்துக் கொள்கிறேன், உமியோடு இருந்தாலும் சரி, திரவமாக இருந்தாலும் சரி, செம்புடன் கலந்திருந்தாலும் சரி, நான் கொடுத்த காசுக்கு என் தங்கம் என்னிடம் வர வேண்டும், அதை நான் என்னமோ செய்து கொள்கிறேன், என் தங்கம் எனது உரிமை..!! தம்பி கொஞ்சம் தண்ணி கொடு..." என்றேன்.
அவர் சீட்டை எடுத்துக் கொண்டு எங்கோ போனார், சிறிது நேரம் கழித்து சரவணபவன் சூப்பர்வைசர் போல் ரெண்டு பேரை உடன் கூட்டி வந்தார். அவர்கள் சற்றே தோரணையுடன் "அப்படியெல்லாம் செய்ய முடியாது சார்" என்றார்கள்.
"எதை செய்ய முடியாது?"
"நீங்க கேக்கிற மாதிரி சேதாரத்தை குறைச்சு போடவோ, சேதாரத் தங்கத்தை கொடுக்கவோ முடியாது.."
"வெல்... உங்களுக்கு மூன்று options தருகிறேன்...
1. செய்கூலி, சேதாரம் இரண்டிற்கும் சேர்த்து 5% தருகிறேன்..
2. 18% தருகிறேன், ஆனால் அதற்கு நீங்கள் எனக்கு சேதாரம் ஆன தங்கத்தை தர வேண்டும், அல்லது ஏன் தர இயலாது என்ற விளக்கத்தை உங்கள் பில்லுடன் சேர்த்து எழுத்து மூலம் தர வேண்டும்..
3. எனக்கு தங்கம் விற்பனை செய்ய முடியாது என்று உங்கள் வாயாலே சொல்லிவிடுங்கள், நான் சென்று விடுகிறேன்" என்று சொன்னேன்.
அம்மணி, நம்மள பாத்து "எழவக் கூட்டிட்டியா..?! 10% கேட்டா கொடுத்திடுவாங்க, முடிச்சிட்டு வா, போலாம்"ன்னு சொல்ல,
"இது உங்கம்மா வீட்டுல புள்ளைக்கு குடுக்கிற சீதனமா இருந்தா பரவாயில்ல,.. நம்ம வாங்கறதாச்சே... அதுவுமில்லாம செலக்ட் பண்ண நீ எடுத்த நேரத்துல பத்துல ஒரு பங்குதான் நான் எடுக்கப் போறேன், காத்திரு" என்றேன்.
"எனக்குத் தெரியாது, எனக்கு அந்தத் தோடு வேணும்..." என கட்டளையிட அடிவயிற்றில் பேப்பர் வெயிட் ஒன்று உருண்டது.
அவர்கள் அங்குமிங்கும் நடந்தார்கள், யாராரிடமோ பேசினார்கள், என்னை தனியே அழைத்தார்கள், வர முடியாது என சொல்லிவிட்டு சர்விலன்ஸ் கேமராவில் முகம் நன்கு தெரியுமாறு உட்கார்ந்து கொண்டேன். மனதில் பல ஐடியாக்கள் ஓடின. நண்பர்களில் மனித உரிமை ஆர்வலர், வக்கீல் போன்றோரது நம்பர்கள் செல்போனில் இருக்கிறதா என பார்த்துக் கொண்டேன்.
சரியான காரணத்தை விளக்காமல் நுகர்வோருக்கு பொருளை விற்பனை செய்ய முடியாது என்று யாராலும் சொல்ல இயலாது, சொல்லவும் கூடாது; விற்க மறுத்தால் சரியான காரணம் சொல்லாமல் என்னை தட்டிக் கழித்தது, நுகர்வோருக்கு பொருள் விற்பனை செய்ய மறுத்தது, வெகுநேரம் என்னை அங்கு அமரச் செய்தது என பல காரணங்களுக்காக எனக்கு அவர்கள் தண்டம் அழ வேண்டியிருக்கும்; அங்கிருந்த பிற வாடிக்கையாளர்களும், சர்விலன்ஸ் கேமராவுமே சாட்சிகள், வாடிக்கையாளர் சட்டத்திற்கு புறம்பாகவோ, வரம்பு மீறியோ நடந்தால் மட்டுமே வெளியேற்றப் படலாம் போன்றவை மனதில் ஓடிக் கொண்டே இருந்தன...
இதனிடையே, "பாத்தீங்களா அநியாயத்தை.." என துணைக்கு சில என்னைப் போன்ற அப்பாவி கணவன்களையும் அழைத்துக் கொண்டேன். இறுதியாக 6% ஆக குறைத்து எடுத்து வந்தார்கள். திருப்தியாக வாங்கிக் கொண்டு, திண்டுக்கல் வேலு ஹோட்டலில் மட்டன் பிரியாணியும் மூளை வருவலும் சாப்பிட்டு வந்தோம்.
- அன்புடன்
- மலர்வண்ணன்
- மலர்வண்ணன்