Sunday 1 November 2015

அறிந்தும் அறியாமலும்...

கடந்த ஒரு வாரத்தில் மூன்று  முறை நண்பர்களுடன் குழந்தை வளர்ப்பு, பாலியல் கல்வி, சமூகச் சூழல் குறித்து ஏகப்பட்ட பேச்சுகள், கருத்துக்கள், விவாதங்கள், விமர்சனங்கள்...  பகிர்ந்தால் என்ன என தோன்றியது!! மாத்ருபூதம், காமராஜ், ஷாலினி, நாரயனரெட்டி அளவுக்கு நம்மால விளக்கமா சொல்ல முடியாது என்றாலும், முடிந்த வரை...

நண்பர்களுடைய ஒட்டுமொத்த கருத்தும் இதுதான்.  "உலக மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியர்களுக்கு பாலியல் பற்றிய விழிப்புணர்வை நாம் சொல்லிக் கொடுத்து ஏற்படுத்தத் தேவையில்லை.  நாம் எப்படி கற்றுக் கொண்டோமோ அதேபோல் நம் குழந்தைகளும்  கற்றுக் கொள்வார்கள்...",
"முள்ளு மேல சேலை விழுந்தாலும்...",
"கண்ணாடி வீட்டுக்குள்ள இருந்து கல்லை விட்டா...",
"ஒரு ஆண் தப்பு பண்ணா அது அவனோட போயுடும், ஆனா ஒரு பொண்ணு..."
- இதே ரேஞ்சுல இன்னும் நிறைய...  பேசாம ப்ரண்ட்ஷிப்ப கட் பண்ணிடலாமான்னு கூட சில நொடிகள் தோணிச்சு.

"உங்கள்ள எத்தனை பேருக்கு வீட்டுல பாத்து பண்ணி வெச்ச கல்யாணம்?"
பாதிப் பேரு ஆமான்னு சொல்ல,
முதல்ல ஒருத்தர பாத்து கேட்டேன்.  "நிச்சயதார்த்தம் முடிஞ்சு கல்யாணம் பண்ண எவ்ளோ நாள் ஆச்சு?"
"மூணு மாசம்.."
"மூணு மாசத்துல உங்க மனைவி கூட பேசினீங்களா?"
"ம்ம்.. பேசினோம்"
"வெளிய எங்கேயாவது கூட்டிட்டு போனீங்களா?"
"எங்க இதுல அதெல்லாம் ஒத்துக்க மாட்டாங்க..!!"
"உன் சாதி மயிர பத்தி கேக்குல, ரெண்டு பேரும் ஒண்ணா வெளிய போயிருக்கீங்களா இல்லையா?
"ரெண்டு பேரு வீட்டுக்கும் தெரியாம ரெண்டுமூணு தடவ வெளிய போயிருக்கோம்.."
"எங்க?"
"கோவிலுக்கு... அப்புறம் துணிக் கடைக்கு.."
"போன்ல பேசும் போது என்ன பேசுவீங்க?"
"பொதுவா பேசுவோம்.."
"இந்தியப் பொருளாதாரம் பத்தியா..!?, செக்ஸ் பத்தி பேசினது உண்டா?"
"ச்சே.. ச்சே.., இல்ல.."

அடுத்த ஆள்...
"நிச்சயதார்த்தம் முடிஞ்சபிறகு மனைவிய வெளிய கூட்டிட்டு போயிருக்கீங்களா?"
"கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்னாடி தான் பொண்ணை பாத்தேன்..."

"சரி, அந்த ஒரு வாரத்துல என்ன பண்ணீங்க..?"
"கல்யாண வேலையா அலைஞ்சதுல மனைவி கூட அதிகமா பேசல..."

இருவரிடமும் பொதுவாக கேட்டேன்...
"முதலிரவு அன்னைக்கு என்ன பண்ணீங்க..?"
"எல்லாரும் என்ன பண்ணுவாங்களோ, அதைத்தான்..."
"எல்லாரும் பண்ணது இருக்கட்டும், நீ என்ன பண்ண..?"
"எப்படின்னு சொல்லத் தெரியல, ஆனா நல்லபடியா முடிஞ்சது!!"
"மேட்டர் பண்றது எப்படின்னு உனக்கு எப்படி தெரியும்?
1.வாத்தியார், பெற்றோர் சொல்லிக் கொடுத்தாங்களா?
2.நண்பர்கள் மூலம் தெரிஞ்சுதா?
3.மஞ்சள் பத்திரிக்கை, நீலப் படங்கள் மூலமா?
4.உடலுறவைப் பற்றிய தெளிவான மருத்துவப் புத்தகங்கள் மூலமா?"
"2 & 3.."
"இந்த ரெண்டு வழியுமே சரியானது அல்ல, தெளிவான விடை கிடைக்காதுன்னு தெரியுமா?"
"ஆமா..., ஆனா ஒன்னும் பிரச்சனை இல்லையே"

"முதலிரவுல உங்க மனைவி வெட்கப் பட்டாங்களா?, என்ன பண்றதுன்னு தெரியாம முழிசாங்களா?"
"மாப்ள கிட்ட பாத்து பக்குவமா நடந்துக்கோன்னு சொல்லி அனுப்பியிருந்தாங்க.."
"அதாவது புருசன் எது பண்ணாலும் பொறுத்துக்கோ, போகப் போக(!) சரியாயிடும்ன்னு சொல்லி அனுபியிருக்காங்க..!!"
"கிட்ட தட்ட அப்படித்தான்.."
"நீங்களும் அவுத்து போட்டு ரேப் பண்ணியிருக்கீங்க..?!
"?? !! ?? !! ?? !!.."


"உங்களுக்குத் தான் ஒரு எழவும் தெரியல, நம்ம குழந்தைகளுக்காவது உடற்கூறு, பாலியல் சம்பந்தப் பட்ட விஷயங்களை அவர்கள் வயதுக்கு ஏற்ற மாதிரி சொல்லிக் கொடுப்போம்னு தோனியிருக்கா?"
"நம்ம ஏன் சொல்லிக் கொடுக்கணும்? அவங்களா தெரிஞ்சுக்கப் போறாங்க.."
"ஆண், பெண் குழந்தைகளுக்கு எதிரா நடக்கிற பாலியில் வன்முறைகளைப் பற்றி தினமும் கேள்விப் படுறோம், நம்ம குழந்தைகளுக்கு பாதுகாப்பா இருக்கிறது எப்படின்னு யார் சொல்லிக் கொடுப்பா?"
"அதெல்லாம் நல்லபடியாதானே பாத்துக்கிறோம்..."

"சரி போகட்டும்... குழந்தைகள் வளர வளர உடலுறுப்புகளை சொல்லித் தர்றோம் இல்ல, கண், காத்து, மூக்கு, தலை, நாக்கு- ன்னு... அதுபோல எல்லா உறுப்புகளின் சரியான பெயர்களையும் சொல்லித் தந்து இருக்கீங்களா?"
"இல்ல..."
"ஏன்?, பெயரை சொல்லித் தருவதில் என்ன தயக்கம்?, போகட்டும்... மூத்திரம், மலம் என்பதை எப்படி சொல்லித் தருகிறீர்கள்?"
"உச்சா, சூசூ, ஆய், கக்கா..."
"ஏன், சரியான பெயரைச் சொல்லி தருவதில் அப்படி என்ன அசிங்கம், வெட்கம்?"
"அது, அப்படியே சொல்லி பழகிடுச்சி..."
"சரி, தமிழ்ல சொல்ல கூச்சமா இருந்தா, கௌரவமா(!) இங்கிலீஷ்லியாவது சொல்லித் தரலாமில்ல?!, ​_ த்தா, ங்கொம்மா ன்னு சொல்ல கூச்சம் இல்ல, ஆனா இதச் சொல்ல கூச்சமா இருக்கு.."

முடிஞ்சா "குற்றம் கடிதல்" படம் பாருங்க... அதுல வர்ற ஒரு டீச்சர் புள்ளைங்களுக்கு குழந்தை பிறப்பைப் பற்றிய பாடத்தை எடுக்கும் முன்பு ஒரு மாணவனிடம் "உனக்கு அம்மா பிடிக்குமா?" எனக் கேட்டு ஆரம்பித்து, "இப்படித்தான் இந்த உலகில் நாம் எல்லாம் அழகழகா வந்து பிறக்கிறோம்.."ன்னு சொல்லி முடிப்பார்.  ரொம்ப அழகா இருக்கும்.

சில வாரங்களுக்கு முன் Paul Walker நடித்த Running Scared படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.  ஒரு தேடுதலுக்காக 11 வயது நிரம்பிய தன மகனை அழைத்துக் கொண்டு செல்வார்.  வழியில் ஒரு நிர்வாண க்ளப்பில் சென்று பார்க்க எத்தனிக்கையில், மகன் கேட்பான், "இங்கு உண்மையிலேயே நிர்வாணமாக இருப்பார்களா?"
"ஆம், 21 வயசுக்கு மேல நீ வந்து பாக்கலாம்..."
"நான் அம்மாவை நிர்வாணமாக பார்த்திருக்கேன், இதெல்லாம் பெரிய விஷயமா என்ன..?"

சினிமாவை தவிர்க்க முடியாது தான்,  ஆனால் அவற்றில் zoom செய்து காட்டப் படும் cleavage-ம், தொப்புளும் உடற் பாகங்களேயன்றி வேறொன்றும் இல்லை என்ற மனநிலைக்கு கொஞ்சம் கொஞ்சமாக நம்மால் மாற்ற முடியும்.  குழந்தைகளின் வயதுக்கு ஏற்றார் போல் தொடுதல், சுய இன்பம், பீரியட்ஸ் போன்றவற்றை நாமே சொல்லிக் கொடுத்தல் நல்ல சந்ததிகளை உருவாக்கும்.

"இவ்ளோ பேசுறியே, உன் புள்ளைங்கள எப்படி வளர்க்கிற?"
"என் பெரியவளுக்கு 15 வயசாகுது..., எனக்கு போன் பண்ணி, அப்பா, வரும் போது எனக்கு நாப்கின் மறக்காம வாங்கிட்டு வந்திடுன்னு என்கிட்டே சொல்றதுக்கு அவளுக்கு எந்த கூச்சமும் இல்ல..."

நண்பர் ஒருவர், சிங்கப்பூரில் வேலை, வீட்டில் பெண் பார்த்து முடிவு செய்து விட்டனர்.  கல்யாணத்திற்கு சில நாட்கள் முன்புதான் ஊருக்கு வந்தார்.  கல்யாணமும் முடிந்தது.  மறுநாள் காலை திருமணம் செல்லாது என முடிவு செய்யப்பட்டு உறவினர் அனைவரையும் வெறுத்து, உடனடியாக சிங்கப்பூர் சென்று விட்டார் திரும்ப வரவே மாட்டேன் என்ற முடிவுடன்.  ஏனென்றால் அவருக்கு திருமணம் செய்து வைக்கப் பட்டவர் ஒரு அரவாணி!!

நெருங்கிய உறவினர், பெண் முடிவு செய்த இடம், சில பல தலைமுறைகளுக்கு முன்னே நன்கு படித்து பல பதவிகளிலும் வெளிநாடுகளிலும் சொந்தங்கள் இருக்கும் ஓர் குடும்பம்.  திருமணம் முடிந்தது, முதலிரவும் முடிந்தது... மறுநாள் புதுப் பெண் வீட்டைக் கூட்டி விட்டார்.  விசாரித்ததில், "உங்க பையனுக்கு ஒண்ணுமே தெரியல..."ன்னு புகார் செய்ய, நம்மாளுக்கு வெக்கமாகிப் போய் விட்டது.  மேற்படி விசாரணையில் நம்ம எஞ்சினியர் மாப்பிள்ளைக்கு எஞ்சின் ஓட்டுவது பற்றி ஒண்ணுமே தெரியல.  பிறகு மனநல மருத்துவரிடம் இருவரையும் அழைத்துச் சென்று விளங்க வைத்து அடுத்த ஓரிரு நாட்களில் தேரோட்டம் சிறப்பாக நடந்தேறி விட்டது.

மேற்சொன்ன ரெண்டு நிகழ்வுகளிலும் மேலோங்கி நிற்பது பெற்றோரின் அலட்சியமன்றி வேறேதுமில்லை.

குறைந்தபட்சம் மேஜர் ஆன பிள்ளைகள் உடலுறவு, பாதுகாப்பு, கர்ப்பம், கருத்தடை, பாலியல் நோய்கள், கருக்கலைப்பு, ஆணுறை, லூப், Morning-After Pill, குழந்தை பிறத்தல் போன்ற விபரங்களை தெளிவாக அறிந்திருத்தல் அவர்களுக்கான அதிக பாதுக்காப்பையும் தைரியத்தையுமே தரும்.

கீழே உள்ள நடிகை கஸ்தூரியின் படத்தை உங்கள் குழந்தையிடம் காட்டுங்கள்.  தாராளமாக காட்டலாம்.  அவர்களுக்கு இது ஆபாசமாக தெரியவில்லை என்றால் நீங்கள் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.  அவர்கள் "அய்யேய்யே..." என முகம் சுழித்தால் வழிகாட்டல் நிச்சயம் அவசியம். 

















அன்புடன் 
- மலர்வண்ணன்

21 comments :

  1. அண்ணே....நீங்களா..இப்டி எழுதுறீங்க....?? சாதி மயிறு.... அருமை...
    நல்ல கட்டூரை...

    ReplyDelete
  2. மிக அருமையாக அதே நேரத்தில் எளிமையாகவும் தெளிவாகவும் சொல்லி சென்ற பதிவு பாராட்டுக்கள்.

    இங்கு எனது குழந்தை படிக்கும் பள்ளியில் ஜந்தாம் வகுப்பிலே ஹெல்த் சைன்ஸ் என்று சொல்லி இப்படி எல்லாவற்றையும் மிக எளிமையாக சொல்லி புரியவைக்கிறார்கள். இப்படி ஒரு பாடம் தமிழகத்தில் நிச்சயம் சொல்லிதரப்பட வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ம.த.
      வளர்ந்த நாடுகளில் உள்ளது போன்ற பள்ளிச் சூழ்நிலை இங்கும் வரவேண்டும் என்பத்தான் ஆவல், ஆதங்கம் எல்லாம்....

      Delete
  3. நீங்கள் ஒரு குறும்படமே எடுக்கலாம்...!

    ReplyDelete
  4. அண்ணே.... தெரி மாஸ் போங்க.

    ReplyDelete
    Replies
    1. இப்ப படிக்கையில இன்னும் நல்லா எழுதியிருக்கலாமோன்னு தோணுது யாஸிர்...
      புதுசு புதுசா நிறைய சம்பவங்களும் கருத்துக்களும் வந்துட்டே இருக்கு...
      அடுத்த பதிவா போடுவோம்.

      Delete
  5. கொஞ்சம் காட்டமாக இருந்தாலும் நல்ல பதிவு.
    தொடர்கிறேன்!
    த ம 3

    ReplyDelete
    Replies
    1. காட்டமா?! இன்னும் ஸ்ட்ராங்கா எழுதியிருக்கலாமோன்னு எனக்கு தோணுது...
      வருக

      Delete
  6. வணக்கம்
    நல்ல விடயத்தை பகிர்ந்துள்ளீர்கள்... கொஞ்சம் காட்டமாக இருந்தலும் சொல்லிய கருத்து நன்று.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. மிக நல்ல பதிவு மலர்வண்ணன்.

    இளங்கலை படிக்கும் போது படம் ஒன்று (ஃப்ரென்ச் படம் செக்ஸ் கல்வி) எங்கள் கல்லூரியில் போட்டுக் காட்டி ஒரு வாரம் செமினார் வகுப்புகள் போன்று டிஸ்கஷன், தனிப்பட்ட முறையில் கவுன்சல்ருடன் உரையாடல் ஆலோசனைகள் என்று மிகத் தெளிவாக,
    வயதானாலும் செக்ஸ் எனது ஃப்ரெஷாக, கடமைக்காக என்றில்லாமல் என்பதெல்லாம் மட்டுமின்றி, பெண்கள் பாதுகாப்பு பற்றியும், செக்ஸ் பாதுகாப்பு பற்றியும் என்று நிறைய பேசினார்கள்...1984 இல்...அப்போவே ஆனால் இது போன்று எந்த பள்ளியிலும், கல்லூரியிலும் இருக்கானு தெரில இங்கு..

    நானும் என் மகனும் பேசியிருக்கின்றோம். தயக்கமில்லாமல்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நன்றி கீதா...
      அங்கு போல் இங்கும் வர வேண்டும் என்பதுதான் ஆவல்..
      பார்ப்போம்...

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. இப்போதான் உங்கள் இரண்டாம் பாகத்திற்கு நாங்கள் பதில் கொடுத்துவிட்டு முதல் பாகம் நான் வாசித்த நினைவில் எங்கள் கல்லூரி அனுபவம் கொடுத்தேனா என்று யோசித்து வந்தால் அட மலர் அந்தப் படம் எங்கள் கல்லூரி நாகர்கோயில் கல்லூரியில்....ஹோலிக்ராஸ் கல்லூரி. காயத்ரியும் தைரியமாக எழுதுகிறார் என்று பார்த்தால் அவரும் அதே கல்லூரி மாணவி. எனக்கு ரொம்ப ஜூனியர்...1984 ல் அதுவும் நாகர்கோயில் எனும் சிறிய ஊரில் அப்போதே போட்டுக் காட்டி கவுன்சலிங்க் எல்லாம் செய்தார்கள் எங்கள் இளங்கலை மூன்றாவது வருடத்தில்.

      எனது பின்னூட்டத்தில் இங்கு என்று சொன்னது பொதுவாக. ஒருவேளை நீங்கள் நான் சொல்லியது வெளிநாட்டில் என்று நினைத்துவிட்டீர்களோ என்றுதான் இந்தப் பின்னூட்டம்.

      எந்தப் பள்ளியிலும் கல்லூரியிலும் இருப்பதாக என் சிற்றறிவிற்கு எட்டவில்லை.

      கீதா

      Delete
    4. தகவலுக்கு நன்றி,
      வெளிநாட்டில் என்றுதான் நினைத்திருந்தேன்...

      Delete
  8. பாலியல் கல்வியை வலியுறுத்தும் தங்களின் இப்பதிவு வரவேற்பிற்கு உரியது. கடந்து வந்த பல சம்பவங்களை நினைவில் எழச் செய்கிறது. சமீபத்தில் என்னுடன் பணியாற்றும் அயல்நாட்டு நண்பர்கள் சிலருடன் பிள்ளைகள் பற்றிய சம்பாஷனை ஏற்பட்டது. அப்பொழுது ஒருவர் தனது 13 வயது மகனைப் பற்றி கூறுகையில், சற்று கிசுகிசுத்தக் குரலில் இவ்வாறு கூறினார், "I think my son is in love with the girl who lives in our next door. Today morning I saw them kissing each other behind the bushes. puppy love..." இதைச் சொல்லிவிட்டு வெடித்துச் சிரித்தார். அவருக்கு ஒரேப் பெருமிதம், முகமெல்லாம் பூரிப்பு. அனைவரும் அவருடன் இணைந்து சந்தோஷித்துச் சிரித்தனர். நான் சிறிது நேரம் என்ன react செய்வதென்று புரியாது திருதிருவென்று முழித்தேன். பின் சற்று நிதானித்து, சந்தேகத்தை சுற்றுவளைத்து நேராகவே கேட்டுவிட்டேன், "விபரீதம் ஏதும் ஏற்பட்டுவிடாதா?" என்று. எல்லோரும் என்னை விசித்திரமாகப் பார்த்தார்கள். பின் அவர் எனக்கு அளித்த பதில், "by this time they should know what they are doing and how to protect themselves." நானும் சிரித்து மழுப்பி உரையாடலில் முன்னகர்ந்தேன். மனதில் பின்வரும் dialogue ஓடியது "கழுத வயசாகியும் இந்த விஷயம் ஒழுங்காத் தெரியாம தான் எங்க ஊர்ல பல பேரு கல்யாணமான ஒரு மாசத்துலயே குட்டியப் போட ரெடி பண்ணீட்டு முழிக்கிறோம்... உலக மக்கள் தொகைல 2ம் எடத்த தக்க வச்சுகவும் முடியுது... எங்க ஊரா இருந்திருந்தா இந்நேரம் ரெண்டு குடும்பத்துக்கு எடையில வெட்டுகுத்தாப் போயிருக்கும் டோய்"

    ReplyDelete
    Replies
    1. //எங்க ஊரா இருந்திருந்தா இந்நேரம் ரெண்டு குடும்பத்துக்கு எடையில வெட்டுகுத்தாப் போயிருக்கும் டோய்//

      மிகவும் ரசித்தேன்..

      Delete
  9. எழுதத் தூண்டுதலாய் அமைந்தமைக்கும், கிட்டத்தட்ட மனதில் புதைந்து போன சம்பவங்களை நினைவு கூற சந்தர்ப்பம் அளித்தமைக்கும் நன்றி. என் தளத்திற்கு தங்களை வரவேற்கிறேன்.

    http://enparvaiyelulagam.blogspot.com/2015/11/blog-post_4.html

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி... தொடர்ந்து எழுதவும்

      Delete