Sunday 7 February 2016

விசாரணை - அனுபவத்திராத அனுபவம்



பொல்லாதவனில் எஸ்.ஐ., இன்ஸ்பெக்டருடன் போனில் பேசிக் கொண்டே, "அய்யா, சொல்லுங்கய்யா, சரிங்கய்யா..." என்றவாறே தனுஷின் கம்ப்ளைன்ட் எழுதிய பேப்பரின் பின்புறம் வரிசையாக எழுதிக் கொண்டே, "ஆங்.., வஞ்சரம் தாங்க அய்யா..." என சொல்லும் போது தான் அவர் இன்ஸ்பெக்டருக்கு உண்டான லஞ்ச் மெனுவை எடுத்துக் கொண்டிருப்பது தெரியும். போனை வைத்து விட்டு கெட்ட வார்த்தையில் முணுமுணுப்பார். ஆடுகளத்தில் பேட்டைக்காரன் தனது சேவல்சண்டை எதிரியான இன்ஸ்பெக்டரிடம் வரம்பு மீறி பேச, எஸ்.ஐ. வேகமாக உள்ளே செல்வார், சிறிது நேரத்திற்குப் பிறகு இயல்பாக கையை உதறிக் கொண்டே வெளியே வருவார்.

சொற்ப நேரமே வரக்கூடிய இந்தக் காவல்நிலைய காட்சிகளே நினைவே விட்டு அகலாத போது, வெறும் காவல் நிலையத்திலேயே மட்டும் நடக்கும் முழுக் கதையென்றால்..., "விசாரணை"யில் விளையாடி விட்டார் வெற்றிமாறன்!!

எடிட்டர் டி.ஈ.கிஷோருக்கு சமர்ப்பித்து, அனுராக் காஷ்யப் தொடங்கி பலருக்கு நன்றி தெரிவித்து, இறுதியில் "லாக்கப்-சாமான்யனின் குறிப்புகள்" எழுதிய மு.சந்திரகுமாரின் வார்த்தைகளோடு முடித்து, அனைவருக்கும் க்ரெடிட் கொடுத்தது சிறப்பு.

உதவாத சட்டங்களை வைத்துக்கொள்ள-கடைபிடிக்க-ஏற்றுக்கொள்ள முடியாத நிலை, மேலதிகாரிகளின் சொல்லுக்கு வேற வழியே இல்லாமல் செய்து முடிக்கும் இடைநிலை-கீழ்நிலை அதிகாரிகள், சட்டம்-நீதி என எதுவுமே தெரியாமல் இருக்கும் வசதியற்ற-பயந்த பெரும்பான்மைச் சமூகம், இவற்றிற்கிடையே நடக்கும் one side game தான் "விசாரணை".

இறுதியில் "சுபம்" போட்டே ஆக வேண்டிய கொடுமையை உடைத்து மெக்சிகன், தென்அமெரிக்க படங்களப் போல புதுப்பேட்டை, ஆரண்யகாண்டம் படங்களைத் தொடர்ந்து ராவான ஆனால் ப்ராக்டிகலான முடிவுகளைக் கொண்டப் படங்கள் வருவது பெரிய ஆறுதல். விசாரணையும் அப்படியே...
 
வசனங்களைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்...

"யோவ்... நான் உன்ன என்ன, திருடனைப் புடிக்கவா சொன்னேன், கேஸை முடிக்கத்தானே சொல்றேன்..."

"கோட்டாவுல போஸ்ட்டிங்க வாங்கிட்டு வந்துட்டு ப்ரோசிஜர் தெரியாம இருக்கானுங்க..."

"பேர் என்னடா...?"
"அப்சல் சார்.."
"அல்-கொய்தாவா, ஐஎஸ்ஐஎஸ்யா..?
"நான் தமிழ் சார்..."
"எல்டிடிஈயா..?" 

"அய்யா, பிரஸ்சுக்கு இன்ஸ்பெக்டர் முத்துவேலோட யுனிபார்ம்ல இருக்க ஒரு போட்டோவும், அவரோட கல்யாண போட்டோவும், பொண்டாட்டி புள்ளைங்க அழுவுற போட்டோவும் ஒன்னு குடுத்துடலாம்யா..."

"அய்யா..., இப்ப வேண்ணா பசங்கள வெளிய அனுப்பிட்டு, நம்ம ஸ்கெட்ச் குமார விட்டு..."
"யோவ்... மூடிட்டு வெளிய போ..."

இதுபோல் நிறைய...

இறுதிக் காட்சியில் முத்துவேலுக்கும் பாண்டிக்கும் என்னவானது என்பதை வசனத்தாலேயே சொல்லி முடித்தது,
ரத்தவெள்ளத்தில் அப்சல் கிடக்கும் காட்சியை கருப்பு-வெள்ளையில் காட்டி வன்முறையை மிகைப்படுத்திக் காட்டாமல் அதன் பாதிப்பை உணர வைத்தது,
கட்டித் தொங்கவிட்ட கிஷோரை இறக்கி விட்டுக் கொண்டே உதவி கமிஷனரிடம் போனில் ‘..அய்யா.., அய்யா..’ என்றபடியே அவருக்கு முத்துவேல் பதில் சொல்வது,
மொத்த போலிஸ் குழுவும் என்கவுன்ட்டருக்கு திட்டம் போட்டு, பின் பசங்களை ஸ்பாட்டுக்கு கொண்டு போவது,
ATM கொள்ளை என்கவுன்ட்டரை இக்கதைக்கு உபயோகப் படுத்திக் கொண்டது...,
வெனிஸ்சில் வெற்றிமாறன் பெற்ற விருதுக்கு இதுபோல் பல காட்சிகள் படத்தில்...

சமுத்திரக்கனி, கிஷோர், தினேஷ், ஆடுகளம் முருகதாஸ், சரவணா சுப்பையா, ஈ.ராமதாஸ், அனைவரும் இப்படத்தில் வாழ்ந்திருக்கின்றனர். சமுத்திரக்கனிக்கு நடிப்பில் நல்ல எதிர்காலம் உண்டு போல..., படத்தில் பெண் கேரக்டர் வெச்சே ஆகணும் என்பது போல், ஆனந்தியும், மிஷாகோஷலும் வந்து போகின்றனர். அதுவும் பெண் கான்ஸ்டபிள் மிஷாகோஷல் எழுந்து போகும் போதெல்லாம், பசங்களுக்கு மரண அடி விழுவது என்ன குறியீடோ?!

நாம் அனுபவத்திராத சில உண்மைச் சம்பவங்கள் தான் விசாரணை...!! காக்காமுட்டையைத் தொடர்ந்து இப்படத்தைத் தயாரித்த தனுஷுக்கு பாராட்டுக்கள்..!!


14 comments :

  1. பார்க்க தூண்டுகிறது விமர்சனம்..

    ReplyDelete
  2. ஆமாம் மலர் பார்த்துவிட்டேன். செம படம். கேரளத்துப் படங்களில் கூட சுபம் இல்லாமல் பல ப்ராக்டிகல் முடிவுகள் அதுவும் மனசை உடைக்கும் முடிவுகள் கூட வைக்கத் தயங்கமாட்டார்கள். விசாரணை - வெற்றிமாறன் வெற்றி பெற்றிருக்கிறார் நல்ல இயக்குநர்...

    கீதா: மலர் நானும் இந்தப்படம் பார்க்க வேண்டும் என்று முந்தாநாள் படம் பார்க்கப் போனா செம கூட்டம் ஆன்லைன் புக்கிங்க் எல்லாம் பண்ணாம போனா..அதுவும் அதுக்கு முந்தின நாள் வேற நம்ம சகாயம் ஐயா வேற பாசிட்டிவ் கமென்ட் கொடுக்க அதுவே படத்துக்குச் செம விளம்பரம் கொடுத்திட கூட்டம்..ஸோ டிக்கெட் கிடைக்காம இறுதிச்சுற்று படம்..ம்ம்ம் படம். நம்ம ஊருக்கு ஏத்தா மாதிரி எடுத்துருக்காங்க படம் பார்க்கும் போது மில்லியன் டாலர் பேபி படம் தழுவல்னு தோன்றியது. அந்தப் படம் இடையில இடையில் மனதில் தோன்றியதைத் தவிர்க்க முடியல.

    ReplyDelete
    Replies
    1. வாங்க துளசி & கீதா, செலக்டிவ்வான மலையாளப் படங்களை முன்னே பின்னே ஆனாலும் பார்த்து விடுவேன். சமீபத்தில் வந்த Masaan (ஹிந்தி) படத்தைத் தொடர்ந்து அதிர்வை ஏற்படுத்தியது விசாரணை...

      இறுதிச் சுற்று இன்னும் பார்க்கவில்லை. அது ஏனோ, மாதவன், விஷால் போன்றவர்களை பெரிய திரையில் பார்ப்பது ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. பார்க்கணும்...,
      முடிந்தால் "அழகு குட்டி செல்லம்" பாருங்கள்..., அழகு, அருமை, அற்புதம்

      Delete
    2. விசாரணை பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்களைப் பெற்றிருக்கிறது.இறுதி சுற்றும் அருமையான படம் இதுவரை பார்த்திராத மாதவன்

      Delete
    3. இறுதி சுற்றில் பாட்டுக்கள் இருக்கா?

      Delete
    4. வாங்க முரளி... நன்றி

      Delete
    5. இ.சு. இன்னும் பாக்கல..., பாடல்கள் இருக்கு, ஒரு குத்து தவிர சில மான்டேஜ் பாடல்களும் இருக்கும் போல

      Delete
  3. படம் இரண்டு மணி நேரத்திற்கு குறைவாக இருக்குமா?
    கதையின் ஓட்டத்தை பாட்டு என்ற பேரில் ரம்பம் போட்டு குலைக்காமல் 1.30 - 1.45 நேரம் இருந்தால் அவசியம் பார்ப்பேன்! கட்டாயம் பார்ப்பேன்!

    தமிழ் பாட்டுக்கள் பிடிக்கும்; ஆனால், படத்தில் பார்க்க பிடிக்காது. முன்பாவது தம் போடுவேன்--அதற்காக அப்ப நான் பாட்டுக்கு ஏங்குவேன்!

    ReplyDelete
    Replies
    1. இன்டர்வலோட சேர்த்து இரண்டு மணி நேரத்துக்கும் குறைவு தான்...
      பாடல்கள் கிடையாது...

      Delete
  4. வணக்கம்
    விமர்சனம் மிக அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. படத்தை பார்க்கத் தூண்டும் விமர்சனம் .பார்ப்போம்

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் பாருங்க கரிகாலன்

      Delete