ஈரானிய, கொரிய, ஆங்கில மொழிப்
படங்களைப் போல் ஸ்பானிஷ் படங்கள்
இருப்பதில்லை. காரணம், ஸ்பானிஷ் திரைப்படங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட
நாடுகளில் இருந்து
வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. மெக்ஸிகோ, பிரேசில், அர்ஜென்டினா,
கொலம்பியா, ஸ்பெயின் போன்ற பல நாடுகளில் இருந்தும் வெளி வருவதால் ஒவ்வொரு
படமும் ஒன்றுக்கொன்று துளி கூட சம்பந்தம் இல்லாமல் இருக்கும். Y Tu Mama
Tambien (மெக்ஸிகோ), La Nina Santa(அர்ஜென்டினா), Miss Bala(மெக்ஸிகோ),
Ameros Perros(மெக்ஸிகோ), Maria Full
of Grace(கொலம்பியா), City of God(பிரேசில்), Central Station(பிரேசில்)
என நான் பார்த்த வெகு சில ஸ்பானிஷ் படங்களின் மூலம் இதை தெரிந்து கொண்டேன்.
Art
வகைத் திரைப் படங்கள் என்று நாம் வகைப்படுத்தக் கூடிய படங்கள்
ஸ்பானிஷில் சொற்பமே. எந்த நாட்டைச் சேர்ந்த ஸ்பானிஷ் படமாக இருந்தாலும் எடுத்துக் கொண்ட படத்தின் one line concept-ஐ விட்டு வெளியே செல்லாமல்,
விறுவிறுப்பு குறையாமல்,
திரைக்கதையில் விளையாடி நம்மை பரவசப்படுத்தும் படங்களாகவே இருக்கின்றன.
ரஷாமோன் வகை திரைக்கதை யுக்திக்கு இன்றுவரை Ameros Perros மிகச்சிறந்த
உதாரணமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. (இந்த வகையில் மணிரத்னத்தின் "ஆய்த
எழுத்து" தான் தமிழில் இதுவரை வந்த ஒரே படம்!!)
Los Ojos De Julia (ஸ்பெயின்), ஆங்கிலத்தில் Julia's Eyes, 2010-இல் வெளிவந்த ஒரு பக்கா ஸ்பானிஷ் த்ரில்லர்.
பிறவியிலேயே
கண்பார்வை இல்லாமல் இருப்பது ஒரு வகை. ஆனால் நன்றாக இருந்த பார்வை சிறிது
சிறிதாக முற்றிலுமாக பறி போய் வெளிச்சத்தையும், வண்ணங்களையும் இழந்து
ஆழ்ந்த இருட்டில், ஒலிக்கும் ஒவ்வொரு சத்தமும் குழப்பத்தையும், பயத்தையும்
உருவாக்கி செத்துத் தொலையலாம் என்ற முடிவை எடுக்க தூண்டுகிறது.
படத்தின் Opening...
ஸாரா தன் கைகளால் துழாவிக் கொண்டு
வீட்டின் கீழ்ப் பகுதிக்கு வருகிறாள். பார்வை பறி போன நிலை. கைகளை
விரித்துக்கொண்டே பயத்துடன் அங்குமிங்கும் அலைகிறாள். அவளது காலில் ஒரு
ஸ்டூல் தட்டுப்படுகிறது . அதில்
ஏறி, கூரையிலிருந்து தொங்கும் ஒரு சுருக்குக் கயிறை தனது கழுத்தில்
மாட்டிக்கொள்கிறாள். திடீரென அங்கே யாரோ இருப்பது அவளுக்குத் தெரிகிறது.
“இங்குதான் இருக்கிறாயா? உன் கண்முன் இறந்து, நான் துடிதுடித்துச் சாகப்போகும் இன்பத்தை உனக்குத் தரமாட்டேன். இங்கிருந்து போய்விடு” என்று சொல்கிறாள்
பயத்திலும் பரபரப்பிலும்
தனது கழுத்தில் இருக்கும்
சுருக்கிலிருந்து வெளியேற முயற்சிக்கிறாள். அவளது கைகள் நடுங்குகின்றன.
திடீரென அவள் நின்றுகொண்டிருக்கும் ஸ்டூல் உதைக்கப் பட்டு ஒரு ஸ்டில் காமெராவின் பிளாஷ் வெளிச்சம் பளிச் பளிச்சென்று அறையெங்கும்
தெறிக்கிறது.
தொங்கிக் கொண்டே துடிக்க ஆரம்பிக்கிறாள் ஸாரா.
அதே நேரத்தில்
தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருக்கும் ஸாராவின் இரட்டைச் சகோதரியான ஜூலியா மயங்கி
விழுகிறாள்.
படம் துவங்கிய பின் படுவேகமாக க்ளைமாக்ஸை நோக்கிப் பயணிக்கிறது. ஒவ்வொரு
காட்சியிலும் ஒரு மர்மம் இருக்கிறது. த்ரில்லர் என்பதற்கு ஒரு உதாரணக் காட்சி:
கண்
தெரியாத சில பெண்கள், குளியறையில் நின்று சாராவைப் பற்றி பேசி
கொண்டிருகின்றனர்... அவர்கள் கவனிக்கா வண்ணம் அவர்களிடையே வந்து
நிற்கும் ஜூலியா அவர்கள் பேசுவதை கேட்டுகொண்டிருக்கிறாள்.
திடீரென்று அவர்கள் தங்கள் அருகில் இன்னொரு நபர் இருப்பதை
உணர்ந்து காற்றில் கைகளை வீசி ஜூலியாவை பிடித்து விடுகின்றனர், அதன் பின்னர்
அவள்
தன்னை யாரென்று அறிமுகம் செய்து கொண்டு அவர்களுக்கு சமாதானம்
சொல்கையில், ஒருத்தி கேட்கிறாள் "சரி, இருக்கட்டும்...
யாரவன்?" "எவனும் இங்கில்லையே" என ஜூலியா சொல்ல," அப் பெண், "உன்னுடன் இங்கு ஒரு ஆண் வந்திருக்கிறான்.. உனக்கு பின்னே தான்
நிற்கிறான்.... யாரவன்?" எனக் கேட்கிறாள். ஜூலியா திரும்பிப் பார்க்க, ஒருவன் ஓடுகிறான்.
Degenerative
eye disease என்னும் நோயால் கொஞ்சம் கொஞ்சமாக பார்வை இழந்து கொண்டே வரும் ஜூலியாவை கொலைகாரனும் பின் தொடர்கிறான்! இதனிடையே
ஜூலியா தன் கணவனையும் தொலைத்து விடுகிறாள். பின்னர் எப்படி அந்த
கொலைகாரனை கண்டு கொள்கிறாள், அவன் கண் தெரியாத சாராவையும், பின்னர்
ஜூலியாவையும் துரத்தக் காரணமென்ன? இறுதியில் ஜூலியா என்ன ஆகிறாள்?
என்பதை அவ்வளவு சுவாரசியமாக சொல்லி இருக்கிறார்கள்.
இன்னொரு காட்சியில், ஆபரேஷனுக்குப் பின் கண்களில் கட்டுடன் ஜூலியா இரவில் படுத்திருக்கும் போது அந்நியனின் இருப்பை அறிந்து கொள்கிறாள். தன் உதவியாளரிடம் போனில் பேசிக் கொண்டே காலடிகளால் அளந்து வீட்டை விட்டு வெளியேறும் காட்சி பரபரவென்று இருக்கும்.
படத்தின் முதல்
காட்சியில் கண் தெரியாத சாரா கொலைகாரனிடம் பேசிக்கொண்டே தற்கொலை செய்து
கொள்வதிலிருந்தே நிமிர்ந்து உட்கார வைக்கிறார்கள். அதன் பின் ஜூலியா, சாரா
சென்ற ஒவ்வொரு இடமாக சென்று விசாரிக்க தொடங்க, அவளை கொலைகாரனும் பின்
தொடர்கிறான்.
விசாரணையில் சம்பத்தப் பட்ட மேலும் இருவர் கொல்லப் படுகிறார்கள்.
(அவர்கள் யாரென்று சொன்னால் படம் பார்க்கும் சுவாரசியம் போய்விடும்). ஒரு
கட்டத்தில் கண் பார்வை முற்றிலும் பறி போய், மாற்றுக்கண்
பொருத்தப்பட்டு, ஆபரேஷன் செய்து கொண்டு, கண்களில் கட்டு போட்டுக்கொண்டு
திரிகிறாள்.. அப்போது நடக்கும் காட்சிகள் தான் உச்சக்கட்டம்.
படத்தில் ஜூலியவிற்கு கண் பார்வை
குறைந்து கொண்டே வருவதனால் அவள் பார்வை வழியே தெரியும் காட்சிகள் எல்லாம் அவளுக்குத் தெரிவது போலே நமக்கும் மங்கலாக காண்பிக்கப் படும். ஜூலியா பார்க்க முடியாமல்
தடுமாறும் இடங்களில் நாமும் தடுமாறுவோம். ஒரு கட்டத்தில் ஜூலியாவிற்கு
ஆபரேஷன் செய்து கண்களில் கட்டு போட்ட பின்பு அவளால் யார் முகத்தையும்
பார்க்க முடியாததால் நமக்கும் யார் முகத்தையும் காட்ட மாட்டார்கள்.
கொலைகாரனை யூகிக்க முடிந்தாலும் அவன் முகத்தை நாம் பார்க்க முடியாது.
Guillem Morales இயக்கத்தில் Belén Rueda சாரா, ஜூலியா இரு வேடங்களிலும் கலக்கியிருப்பார். The orphanage படத்தில் நடித்த வயதானவரா இவர் என்று வியக்க வைத்திருப்பார்.
கொட்டும் மழையில் ஜூலியா கயிறைப் பிடித்துக் கொண்டே தப்பிச் செல்லும் காட்சி, கொலையாளி ஜூலியாவிற்கு கண்பார்வை தெரிகிறதோ என சந்தேகித்து அவன் செய்யும் சோதனைகள், பக்கத்து வீட்டுப் பெண்ணின் முடிவு என பல காட்சிகள் நம்மை சிலிர்க்க வைக்கும்.
படத்தில் என்னை மிகவும் கவர்ந்த காட்சிகளில் ஒன்று...
- அன்புடன்
- மலர்வண்ணன்
Guillem Morales இயக்கத்தில் Belén Rueda சாரா, ஜூலியா இரு வேடங்களிலும் கலக்கியிருப்பார். The orphanage படத்தில் நடித்த வயதானவரா இவர் என்று வியக்க வைத்திருப்பார்.
கொட்டும் மழையில் ஜூலியா கயிறைப் பிடித்துக் கொண்டே தப்பிச் செல்லும் காட்சி, கொலையாளி ஜூலியாவிற்கு கண்பார்வை தெரிகிறதோ என சந்தேகித்து அவன் செய்யும் சோதனைகள், பக்கத்து வீட்டுப் பெண்ணின் முடிவு என பல காட்சிகள் நம்மை சிலிர்க்க வைக்கும்.
படத்தில் என்னை மிகவும் கவர்ந்த காட்சிகளில் ஒன்று...
- அன்புடன்
- மலர்வண்ணன்